மீண்டும் பேய் கதையில் நடித்த சந்தானம்!! “டிடி ரிட்டன்ஸ்” முழு விமர்சனம்!!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து இப்பொழுது ஹீரோவாக இருப்பவர் தான் நடிகர் சந்தானம். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இந்த நிகழ்ச்சியின் மூலமே எராளமான ரசிகர்களை ஈர்த்து இருந்தார். அதன் பின்பு 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான “மன்மதன்” என்னும் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு “கண்ணா லட்டு தின்ன ஆசையா” முதலிய திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவையில் கலக்கி கொண்டு இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் படத்தில் ஹீரோவாக நடித்தார்.
நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் தற்பொழுது ஹீரோவாக மட்டுமே நடிக்க முடிவு செய்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். அந்த வகையில் இயக்குனர் எஸ். பிரேம் அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகின்ற படம் தான் டிடி ரிட்டன்ஸ்.
இந்த படம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த படம் சந்தானம் கொடுத்த வெற்றி படங்களில் ஒன்றான “ தில்லுக்கு துட்டு” படத்தின் மூன்றாம் பாகம்.இந்த படத்திற்கு மட்டும் சந்தானம் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று வெளியான டிடி ரிட்டன்ஸ் படம் காமெடி கலந்த பேய் படமாக உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.மேலும் திரைபடத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது.இது மட்டுமலாமல் கிராபிக்ஸ் காட்சிகளும் இடம் பெற்று ரசிகர்கள் ரசிக்கும் படியாக உள்ளது.