பெண்களே உங்களுக்கு குபுகுபுவென்று முடி வளர வேண்டுமா!!? அப்போ இந்த எண்ணெயை பயன்படுத்துங்க!!!

0
51
#image_title

பெண்களே உங்களுக்கு குபுகுபுவென்று முடி வளர வேண்டுமா!!? அப்போ இந்த எண்ணெயை பயன்படுத்துங்க!!!

முடி வளர்ச்சி குறைவாக இருக்கின்றது என்று கவலைப்படும் பெண்கள் அனைவருக்கும் முடி வளர்ச்சி ஜெட் வேகத்தில் குபுகுபுவென்று வளர்வதற்கு இந்த பதிவில் அருமையான ஒரு எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு இருக்கும் 1000 கவலைகளில் முதல் கவலை அவர்களின் முடி வளர்ச்சி பற்றி தான். ஒரு சிலருக்கு முடி வளர்ச்சி இருக்காது. ஒரு சிலருக்கு முடி வளர்ச்சி இருந்தாலும் முடி உதிரும் பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்கு முடி உதிரும் பிரச்சனையும் முடி வளர்ச்சி அடையவில்லை இருக்கும்.

இவர்கள் அனைவரும் பொதுவாக முடி வளர்ச்சி அடைய வேண்டும், முடி உதிர்தல் தடுக்கப்பட வேண்டும் என்று நினைத்து பல விதமான எண்ணெயைகளை பயன்படுத்துவார்கள். பலன் இருக்கும். என்ன நடிகர் எஸ்.ஜே சூரியா அவர்கள் கூறுவது போல ‘இருக்கு ஆனா இல்லை’ அது போலத்தான் முடிவு இருக்கும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க வேம்பாளம் பட்டை எனப்படும் ஒரு பட்டை வகை பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இந்த பட்டையை பயன்படுத்துவதால் முடி வளர்ச்சி மட்டுமில்லாமல் முடி உதிரும் பிரச்சனையும் குறைகின்றது.

இந்த விளம்பரம் பட்டையில் எண்ணெய் தயாரித்து அதன் பிறகு நம் தலைக்கு பயன்படுத்த வேண்டும். இதில் எண்ணெய் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

வேம்பாளம் பட்டை எண்ணெய் தயாரிக்க தேவையான பொருள்கள்…

* வேம்பாளம் பட்டை
* தேங்காய் எண்ணெய்
* விளக்கெண்ணெய்

செய்முறை…

இந்த எண்ணெயை தயாரிக்க முதலில் ஒரு கண்ணாடி பாட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கண்ணாடி பாட்டிலில் சிறிய அளவு வேம்பாளம் பட்டை இரண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த கண்ணாடி பாட்டிலில் தேங்காய் எண்ணெய் ஒரு கப் மற்றும் விளக்கெண்ணெய் கால் கப் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மூடி வைத்து சூரிய ஒளி படும் இடத்தில் 2 முதல் 3 நாட்கள் வைக்க வேண்டும்.

3 நாட்கள் கழிந்து இந்த எண்ணெய் சிவப்பு நிறத்தில் மாறி இருக்கும். இதை தேவையான அளவு எடுத்து சூடாக்கி பிறகு தலை முடியில் தேய்த்து பயன்படுத்தலாம். இதனால் முடி அசுர வேகத்தில் வளர்ச்சி அடையும். முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும்.