மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!

0
330
Happy news for school students!! Holidays again for schools and colleges !!
Happy news for school students!! Holidays again for schools and colleges !!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வருடந்தோறும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் தேர் திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழகத்திலேயே மிகவும் உயராமான தேர்களில் இதுவும் ஒன்று என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கான வருவர்.இந்த தேர் திருவிழாவானது இந்த வருடம் ஆனி மாதம் ஏழாம் தேதி வர உள்ளதால் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளனர்.

அதேபோல 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுத்தேர்வானது அந்த விடுமுறை நாளில் நடைபெறுவதாக இருந்தால் அவர்களுக்கு இந்த விடுமுறையானது செல்லுபடி ஆகாது என்று கூறியுள்ளனர்.தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த நாளில் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.மேலும் பொதுத்தேர்வு பணியாளர்களுக்கும் இந்த விடுமுறையானது பொருந்தாது என கூறியுள்ளனர்.

அதேபோல இந்த விடுமுறை செலவாணி முறை சட்டம் படி அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் விடுமுறையின்றி வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த விடுமுறையை சரி செய்யும் வகையில் இம்மாதம் இறுதியில் 21 ஆம் தேதி வேலை நாளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று கூறியுள்ளனர்.