சீட்டை குறைக்கும் திமுக.. ஸ்டாலின் போட்ட குண்டு.. கூட்டணியில் வெடிக்கும் பூகம்பம்”.. “சிதறும் கூட்டணி கட்சிகள்”..

DMK: திமுக அடுத்த ஐந்து ஆண்டுகள் மீண்டும் நாம்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக உள்ளது. இதற்காக ஆட்சி முடிவதற்கு முன்பு மகளிர் அனைவருக்கும் ரூ 5000 வழங்கியது. மேற்கொண்டு தேர்தல் அறிக்கையில் மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகள் இவர்களுக்கு கை கொடுப்பதாக தெரியவில்லை.

விஜய் அரசியலுக்குள் நுழைந்து கூட்டணி முறையில் ஆட்சி என்று கூறியதிலிருந்து, ஆளும் மற்றும் எதிர் கட்சி என ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி முறையில் ஆட்சி வேண்டும் என கேட்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக திமுகவிற்கு அது பாதகமாகவே அமைந்துவிட்டது. விடுதலை சிறுத்தை திருமாவி-ல் தொடங்கி, காங்கிரஸ் வரை அனைவரும் திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் திமுக கூட்டணி ஆட்சிக்கு ஒத்துவரவில்லை.

மாறாக தொகுதி பங்கீடாவது வழக்கம் போல் இல்லாமல் இரட்டை இலக்க எண்ணில் தான் வேண்டும் என அனைவரும் பிடிவாதமாக உள்ளனர். தமிழக காங்கிரஸின் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் கூட நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், அனைத்து கட்சியினருடன் தான் பேச வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இன்னும் திமுக பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுக்கவில்லை.

எங்களது முக்கிய நோக்கமே தொகுதிகளின் பங்கீட்டின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் என்று கூறியுள்ளார். இதைப் போல திமுகவில் ஒவ்வொரு கட்சியினரும் தொகுதி பங்கீடு குறித்து பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் திமுக வழக்கத்திற்கு மாறாக அதிரடி முடிவை எடுக்க உள்ளது. வருடம் வருடம் ஒதுக்கும் தொகுதியை காட்டிலும் அதிலிருந்து ஒரு தொகுதியை குறைத்து வழங்குவதாக உள்ளது.

கட்சியில் புதிதாக தேமுதிக இணைந்துள்ளதால் இந்த மாறுபாடு இருக்கலாம் என கூறுகின்றனர். முன்னதாகவே காங்கிரஸ் வெளிப்படை தன்மையுடன் விஜய் உடன் பேச்சுவார்த்தை கூட நடத்துவோம் என கூறியுள்ளதால் இது மாதிரியான திடீர் முடிவுகள் கூட்டணியில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். இந்த முடிவால் திமுக கூட்டணி உடையக் கூடும்.