கொரோனா எதிரொலி : சென்னை – மும்பை போட்டி ரத்து

0
217

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், அணி பந்து வீச்சாளர், அணி நிர்வாகிகள் என 13 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,  அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா  போட்டி தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடக்க இருந்த நிலையில் இந்த போட்டி மாற்றப்பட்டது.
Previous articleஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய சென்னை அணியின் நட்சத்திர வீரர்?
Next articleகொரோனாவால் அனுமதிக்கப்பட்ட பெண் 30 நிமிடத்திலேயே உயிரிழந்ததால் டாக்டருக்கு நடந்த கொடூரம் :?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here