நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி பெரும் விபத்து!!! 13 பேர் பலியான சோகம்!!! 

0
52
#image_title
நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி பெரும் விபத்து!!! 13 பேர் பலியான சோகம்!!!
கர்நாடக மாநிலம் அருகே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
கர்நாடக மாநிலம் பகப்பல்லி பகுதியில் இருந்து இன்று (அக்டோபர்26) அதிகாலை டாடா சுமோ கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 10க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த டாடா சுமோ கார் சிக்கபல்லபூர் பகுதியில் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. கார் டேங்கர் லாரி மீது மோதிய பொழுது பயங்கர சத்தம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள், பொதுமக்கள் அனைவரும் விரைந்து சென்று பார்த்தனர்.
மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் இறங்கினர். மேலும் டேங்கர் லாரி மீது கார் மிகவும் வேகமாக வந்து மோதியதால் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் டேங்கர் லாரி மீது கார் மதிய விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் “அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் எதுவும் தெரியாது. அதே போலத்தான் சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி தெரியாத காரணத்தால் கார் ஓட்டுநர் காரை லாரி மீது மோதியிருக்கலாம்” என்று கூறினர். மேலும் காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.