குட் நியூஸ்!! இனி ரேசன் பொருளுக்கு தட்டுப்பாடு இருக்காது.. ஒரே தவணையில் அனைத்து பொருட்களும் வழங்க முடிவு!!

0
31
#image_title

குட் நியூஸ்!! இனி ரேசன் பொருளுக்கு தட்டுப்பாடு இருக்காது.. ஒரே தவணையில் அனைத்து பொருட்களும் வழங்க முடிவு!!

மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புழுங்கல் அரிசி, கோதுமை, பச்சரிசி உள்ளிட்டவைகளை இலவசமாகவும் சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது.

இந்த பொது விநியோக திட்டத்தில் PHH, PHH – AAY, NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் PHH – AAY குறியீடு கொண்ட முன்னுரிமை பெற்ற அட்டைதரர்களுக்கு மாதம் ஒரு முறை 35 கிலோ புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தொகை இன்றி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தாக PHH, NPHH குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 6 கிலோ என்ற அடிப்படையில் புழுங்கல் அரிசி, பச்சரிசி விலையின்றி இலவசமாக வழங்கப்டுகிறது.

இதை தவிர்த்து துவரம் பருப்பு 1 கிலோ ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.13க்கும் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு அரசு தரப்பில் ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஏற்கனவே விநியோகம் செய்யப்படும் பொருட்களுடன் துவரம் பருப்பு மற்றும் 1 பாக்கெட் பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படும் நிலையில் தற்பொழுது புதுவித அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால் மற்ற நாட்களை விட பண்டிகை மாதங்களில் ரேசன் பொருட்கள் வாங்குவது கணிசமாக அதிகரிக்கும். காரணம் வித வித பலகாரம் செய்வதற்காக மக்கள் ரேசன் பொருட்களை வாங்குவார்கள் என்பதினால் சர்க்கரை, பாமாயில், பச்சரிசி உள்ளிட்டவைகளின் தேவை அதிகமா இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு ரேசன் பொருட்கள் கொள்முதலை அதிகரிக்க உணவுத்துறை வழங்கல் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.

அது என்னெவென்றால் பண்டிகை காலங்களில் ரேசன் பொருட்களை மக்களுக்கு வழங்காமல் ரேசன் ஊழியர்கள் வெளியில் விற்று விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு அனைவரின் மத்தியிலும் எழுந்து வருகிறது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அதை கட்டுப்படுத்த கிடங்குகளில் பொருட்களை ஏற்றும் பொழுதும் அதேபோல் ரேசன் கடைகளில் பொருட்களை இறக்கும் பொழுதும் அவற்றை புகைப்படம் எடுத்து உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேசன் பொருள் கடத்தல் தடுக்கப்படுவதோடு மக்களுக்கு உரிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடை இன்றி வழங்க முடியும்.

மேலும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரே தவணையில் வழங்க வேண்டிய அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து தினந்தோறும் அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டுமென்று மாவட்ட உணவு வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதால் குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.