திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! போலீசார் விசாரணை!

0
70
A college student tragically died in a train collision in Dindigul district! Police investigation!
A college student tragically died in a train collision in Dindigul district! Police investigation!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! போலீசார் விசாரணை!

திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை தாலுக்கா ராமகிரி சின்னுலுப்பை பகுதியை சேர்ந்தவர் இலுப்பையா. இவரது மனைவி கல்பனா. இவர்களின் மகன் ஜெகன்(16) மற்றும்  மகளுடன் குஜிலியம்பாறை கூடலூரில் வசித்து வருகின்றனர். இவரது மகன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று இவர் வீட்டிலிருந்து முடிவெட்ட செல்வதாக கூறி சென்றார். முடி வெட்டிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது செல்போனை பார்த்துக் கொண்டே இருபுறமும் கவலைக்காமல் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தார். அப்போது வடமாநிலங்களுக்குச் செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ஜெகன் மீது வேகமாக மோதியது.

சம்பவயிடத்திலேய  பரிதாபமாக ஜெகன் உயிரிழந்தார். ஜெகனின் உடலை மீட்டு இரும்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிகண்டன். இரும்புப் பாதை காவல் நிலைய குற்ற எண் 37 பார் 2022 இந்திய தண்டனைச் சட்டம் 1170 சந்தேக மரணம் என்று பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
Parthipan K