அதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!!

0
113

அதிசயம் நிறைந்த வசம்பு!! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நொடியில் தீர்வு!!

வசம்பு என்றாலே முதலில் ஞாபகம் வருவது குழந்தைகள் தான்.கிராமத்தில் உள்ளவர்கள் இன்றைய காலகட்டத்திலும் காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ மற்றும் சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான நோய் தொற்றும் மறைந்து மறைந்துவிடும். வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனே இரண்டு மூன்று டீஸ்பூன் சாப்பிட கொடுத்தா உடலில் உள்ள விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்.வசம்புடன் மஞ்சளை வைத்து சிறிது நீர் தெளித்து நன்றாக அரைத்து தேள், பூரான், வண்டுக்கடிவாயில் பூசி வந்தால் விஷம் முறியும்.

தேங்காய் எண்ணெயில் குப்பைமேனி சாறை சேர்த்து காய்ச்சி எண்ணெயை வடிகட்டி எடுத்து வைக்கவும். இந்த எண்ணெயை சிரங்கின் மீது தடவிவர சிரங்கு விரைவில் குணமாகும். நம் உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் வலிமையை இந்த வசம்பு கொண்டுள்ளது.

author avatar
Parthipan K