பிரதமர் மகிந்த ராஜபக்சே எடுக்க போகும் அதிரடி முடிவு

0
57
பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவிக்கையில், “பசுக்களை இறைச்சிக்காக கொல்வதைத் தடுக்க வேண்டும் என, புத்த மத மறுமலர்ச்சி பிக்ஷுவும், தேசியத் தலைவருமான அனாகரிகா தர்மபாலா வலியுறுத்தி வந்தார். ஆனால், இதை சட்டமாக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எங்கள் அரசு இதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரவுள்ளது. பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வேண்டுமானால் இறைச்சி சாப்பிடுவோருக்காக இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
author avatar
Parthipan K