மூட்டு வலி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு ஸ்பூன் இதனை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!

0
257

மூட்டு வலி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு ஸ்பூன் இதனை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!

மூட்டு வலிகளை குணமாக்கும் வீட்டு முறை வைத்தியத்தை இந்த பதிவின் மூலமாக காணலாம்.மூட்டு வலி என்பது மூட்டுகளுக்கு இடையே உள்ள ஜவ்வுகளில் ஏதேனும் பாதிப்பினால் உண்டாகக்கூடிய வலி அல்லது மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவம் வறண்டு மூட்டுகளுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு அவை வலியை உண்டாக்குகிறது.

இவை மூட்டு வலிகள் ஏற்படுவதற்கான காரணமாகும். பொதுவாக மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் அதிக உடல் பருமன் கொண்டவர்கள், உடலில் கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் மற்றும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி முரண்பாடாக செயல்படுதாலும் இது போன்ற மூட்டு வலி ஏற்படுகிறது.

மூட்டு வலிகளை உடனடியாக குணமாக்க பயன்படும் மருந்து வெந்தயச் சூரணம் ஆகும் வெந்தய சூரணம் என்பது வெந்தயம், சீரகம், மிளகு ஆகிய மூன்றையும் நன்றாக காய வைத்து அதன் பிறகு பொடி செய்து ஓர் கலவையாக கிடைக்கக்கூடியது வெந்தய சூரணம் ஆகும்.

குறிப்பாக வயது கடந்து உண்டாகக்கூடிய மூட்டு வலிகள் உடலில் கால்சியம் சத்துக்கள் குறைபாட்டினால் ஏற்படக்கூடியது. மூட்டு வலிகளை நிரந்தரமாக குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. வெந்தய சூரணத்தில் அதிகப்படியான கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.

அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் வெந்தய சூரணம் சேர்த்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் காரணமாக நம் உடலில் உள்ள கால்சியம் சத்துக்கள் அதிகரித்து கைகால் மூட்டு வலி ஆகியவற்றை வராதவர் பாதுகாத்துக் கொள்கிறது.

மூட்டு வலியினால் அவதிப்பட கூடியவர்கள் இதனை வீட்டில் செய்து பருகி வருவதன் காரணமாக மூட்டு வலியில் இருந்து முழுமையாக குணமடையலாம்.

 

author avatar
Parthipan K