இளம் பாடகியுடன் மீண்டும் காதல் வயப்பட்ட அனிருத்! இந்த முறையாவது ஜெயிப்பாரா?

0
68

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கி கொண்டிருப்பவர் தான் அனிருத். இவர் 2012ஆம் ஆண்டு தனுஷின் 3 என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.அதில் அவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் எங்கும்  பிடித்தது பெரிய ஹிட் அடித்தது.அவரது இசையமைப்பில் அடுத்தடுத்து ஒவ்வொரு பெரிய கதாநாயகர்களின் படங்கள் தயாரிக்கப்பட்டன.

இன்று அனிருத் தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும்  இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு தனது கேரியரில் அவர் பெரிய ஹிட் அடித்து இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்தார்.

 நடிகை ஆண்ட்ரியாவை காதலிப்பதாக அப்போதே பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அனிருத் மறுபடியும் இரண்டாவது முறையாக மற்றொரு பாடகியின் மீது காதலில் விழுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் டாக்டர் படத்திலிருந்து செல்லம்மா என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.இந்தப் பாடலை அனிருத் உடன் சேர்ந்து ஜோனிட காந்தி என்ற இளம் பாடகி பாடியிருந்தார்.இந்த வீடியோ இணையதளங்களில் செம்ம வைரலானது.மேலும் அந்த பாடலைப் பாடிய ஜோனிட காந்தி என்பவரை தான் தற்போது காதல் செய்து கொண்டிருக்கிறாராம் அனிருத். இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று நமக்கு தெரியாது ஆனால் வலைப்பேச்சு நண்பர்கள் வெளியிட்டு கொண்டுள்ளனர்.இது உண்மையா இல்லையா என்று நமக்கு தெரிய இன்னும் சில சில வருடங்கள் கூட ஆகலாம்

author avatar
Parthipan K