பெண்களின் கவனத்திற்கு! நீங்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத செயல்கள்!

0
118

பெண்களின் கவனத்திற்கு! நீங்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத செயல்கள்!

பெண்கள் பூசணிக்காய் உடைத்தால் கூடாது.இரு கைகளால் தலையை சொரிந்தால் குடும்பத்திற்கு ஆகாது. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தால் கூடாது. பெண்கள் எப்பொழுதும் நெற்றியில் திலகம் இடாமல் பூஜை செய்தால் கூடாது. எப்பொழுதும் சாமி படத்திற்கு வாசனை இல்லாத மலர்களை வைத்து பூஜை செய்தல் கூடாது. நமது வீட்டின் பூஜையறையில் கற்பூரம் ஏற்றினால் அவை தானாக குளிர வேண்டும் நாம் அதனை அணைக்க கூடாது.

எப்பொழுதும் குடும்பத்தை வழி நடத்தும் பெண்கள் அதிகம் கோபம் அடையக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் பொறுமையை இழக்க கூடாது. பெண்கள் எப்பொழுதும் மோதிர விரலை பயன்படுத்தி நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும். குங்குமத்தை இடது கையில் வைத்துக்கொண்டு வலது கையால் அதனை எடுத்து வைத்தல் என்பது தவறான செயலாகும். பெண்கள் எப்பொழுதும் கட்டை விரலால் குங்குமம் இட்டால் துணிச்சல் அதிகரிக்கும் என்பது முன்னோர் வாக்கு. ஆள்காட்டி விரலால் குங்குமம் வைத்தால் நிர்வாக திறமை அதிகம் என கூறுவார்கள். நடுவிரலால் குங்குமம் வைத்தால் ஆயுள் அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது.

 

 

author avatar
Parthipan K