திடீரென அஜித்துக்கு  அட்வைஸ் பண்ணும் மீரா மிதுன்!அட்வைஸ்ல ஆரம்பிச்சு என்ன பண்ண போறாங்களோ?

திடீரென அஜித்துக்கு  அட்வைஸ் பண்ணும் மீரா மிதுன்!அட்வைஸ்ல ஆரம்பிச்சு என்ன பண்ண போறாங்களோ?

மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் மீரா மிதுன்.இவர் மாடலிங்கில் ஆரம்பித்து விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 சீசன் 8  பங்கேற்றார்.பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். அதன்பிறகு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில்  பங்கேற்று வீட்டில் உள்ளே பெரிய சர்ச்சையையும் கிளப்பினார்.மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னும் சர்ச்சை குறைந்தபாடில்லை.மேலும் இவருக்கு சினிமா வாய்ப்பு ஒன்றும் பெரிதாக கிடைக்கவும் இல்லை. இவர் சில நாட்களாக இந்த விரக்தியின் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு; இதுவரை 86,752 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு; இதுவரை 86,752 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,00,619 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,133 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 86,752 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94,612 … Read more

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பரிசோதனை முடிந்து இன்று மாலைக்குள் துணை முதல்வர் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். கடந்த மே மாதம் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

என்னது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையா! கோவை மக்களின் வியப்பு!

என்னது ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையா! கோவை மக்களின் வியப்பு!

தற்பொழுது கொரோனாவின் காரணத்தால் ஊரடங்கினால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கிடையே கோவையில் புதுமண தம்பதியர் ஹெலிகாப்டர் டாக்சியை வாடகைக்கு எடுத்து ஊரை சுற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து திருமணத்திற்கான கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். வானில் வட்டமிட்டபடி இவர்கள் செய்த இந்த செயல் மக்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டத்தில் புதுமண தம்பதியர் 30 நிமிடத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அவர்கள் குடும்பத்துடன் தங்களுக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகில் உள்ள ஈஷா யோகா … Read more

மத்திய அரசின் கடன் நிலுவை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது..!! ஷாக் ரிப்போர்ட்!

மத்திய அரசின் கடன் நிலுவை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது..!! ஷாக் ரிப்போர்ட்!

இந்திய வரலாற்றில் முதன் முறையாக மத்திய அரசின் கடன் நிலுவை தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் கடன் நிலுவை தொகை படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கொரோனா சூழலினால் அதிக அளவு மத்திய அரசு கடன் வாங்கியுள்ளது. அதன் காரணமாகவே மொத்த கடன் அளவு 100 லட்சம் … Read more

நடிகர் ஆர்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்! கதறும் மனைவி சாயிஷா!

நடிகர் ஆர்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்! கதறும் மனைவி சாயிஷா!

இந்த வருடம் 2020 ஆம் ஆண்டு உலக மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவோடு மட்டுமல்லாமல் உலக மக்கள் பலர் பிரபலங்களையும் இழந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவில் சுஷாந்த் சிங் ராஜ்புட், போன்ற பிரபலங்களின் இழப்பு மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழும் சாமானிய மக்களும் கொரோனாவிற்கு இரையாகின்றனர். எனவே மக்களின் பாதுகாப்பை கருதி அரசு ஊரடங்குகள் கொண்டு வந்து மக்களைப் பாதுகாத்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் … Read more

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாரடைப்பால் காலமானார்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாரடைப்பால் காலமானார்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள அந்தனப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்தவர் ஷாகுல்ஹமீது. நடந்து முடிந்து இடைத்தேர்தலில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாகுல் ஹமீது அறிவிக்கப்பட்டிருந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து … Read more

மருத்துவர்களைத் தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை..! மத்திய அரசு

மருத்துவர்களைத் தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை..! மத்திய அரசு

மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மழைக்காலக் கூட்டத்தொடரின் 6ஆம் நாளான சனிக்கிழமை அன்று மாநிலங்களவையில் மருத்துவப் பணியாளர்களைத் தாக்குபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவப் பணியாளர்களை அவமதிப்பது அல்லது தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவுக்கு எதிரான போரில் அர்ப்பணிப்புடன் தன்னலமில்லாமல் … Read more

மத்திய அரசின் திட்டவட்டமான முடிவு!நாடு முழுவதும் மும்மொழி  கொள்கையே!

மத்திய அரசின் திட்டவட்டமான முடிவு!நாடு முழுவதும் மும்மொழி  கொள்கையே!

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் மும்மொழி கொள்கையை பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது. தமிழச்சி தங்கபாண்டியன் இன்று நாடாளுமன்றத்தில் “தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார். “புதிய கல்விக் கொள்கையின்படி நாடுமுழுவதும் மும்மொழிக் கொள்கையை பின்பற்றப்படும் நேரத்தில் மூன்றாவது மொழியாக எதை கற்பிக்க வேண்டும்  மற்றும் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்  என்பது அந்தந்த … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேர் பாதிப்பு; 66 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேர் பாதிப்பு; 66 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,569 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,36,477 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 66 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,751 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,556 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more