பாபர் அசாம் அபாரம்

0
96
இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று  தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை  தேர்வு செய்தது. தொடக்க வீரரான அபித் அலி நீண்ட நேரம் களத்தில் தாக்குபிடிக்கவில்லை 16 ரன்கள்களில் தனது விக்கட்டை பறிகொடுத்தார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் அசார் அலி டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்பு 3-வது விக்கெட்டுக்கு சோடி சேர்ந்த ஷான் மசூட் மற்றும் பாபர் அசாம்  சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அபாரமாக ஆடிய பாபர் அசாம் அரைசதம் அடித்தார். மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் பெரும்பகுதி தடைபட்டது. இதனால் 139 – 2 என்ற நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
author avatar
Parthipan K