Home Blog Page 5721

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த இளம்பெண்! 3 மாதத்தில் சாயம் வெளுத்த நாடக காதல்..!! பின்னர் எடுத்த விபரீத முடிவு?

0

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த இளம்பெண்! 3 மாதத்தில் சாயம் வெளுத்த நாடக காதல்..!! பின்னர் எடுத்த விபரீத முடிவு?

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தெய்வானை மற்றும் இவர்களது 17 வயது மகள் கார்த்திகாவும் தலைவாசலில் அம்மாவுடன் இருந்து தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்கிற இளைஞர் காதல் என்கிற பெயரில் மைனர் பெண்ணான கார்த்திகாவை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டார். இதற்கு சதீஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்தனர்.

இந்த கட்டாயத் திருமணத்திற்கு கார்த்திகாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. பின்னர் இச்சம்பவம் காரணமாக தலைவாசல் காவல் நிலையத்தில், தனது பெண்ணை கடத்தி கட்டாயத் திருமணம் செய்ததாக தெய்வான புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் பெண்ணை கடத்திச் சென்ற சதீஷின் குடும்பத்திற்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், புகாரளித்த தெய்வானை மற்றும் அவரது உறவினர்களை திட்டி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு தாய் தெய்வானையை போனில் தொடர்புகொண்டு பேசிய கார்த்திகா, கணவரின் வீட்டார் தன்னை வரதட்சனை கொடுமை செய்வதாகவும், உன் வீட்டில் இருந்து 1 லட்சம் பணம் வாங்கி வா என்று அடித்து துன்புறுத்தியதாகவும் அழுகையோடு பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி தெய்வானைக்கு போன் செய்து உங்கள் மகள் கார்த்திகா விஷம் குடித்து மயங்கிவிட்டாள். மருத்துவ சிகிச்சைக்காக ஆத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தோம், சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டதாக சதீஷ் கூறினார்.

இத்தகவலை கேட்ட தெய்வானை பதறியடித்து ஆத்தூர் மருத்துவமனைக்கு சென்று மகளின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் தெய்வானை புகார் அளித்தார். என் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் கார்த்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலியான காதலனை நம்பி பெற்றோரை எதிர்த்து கட்டாய திருமணம் செய்து, 1 லட்சம் ரூபாய் வரதட்சனை வேண்டுமென்று நாடகமாடிய சதீஷின் போலியான காதலையும், அவரது குடும்பத்தினர் செய்த கொடுமையும் தாங்க முடியாமல் கார்த்திகா இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனையில் மாணவியின் இறப்பு குறித்து விரைவில் உண்மை வெளிவரும்.

தமிழர் கலாச்சாரம் இருக்கும் போது கொரானா தொற்று ஏற்படாது : பிரதமர் மோடி பெருமிதம்

0

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று சீனா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நோய் வராமல் தடுக்க பல்வேறு குறிப்புகள் சொல்லப்பட்டு வந்தாலும் அதிகாரப்பூர்வமாக மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது.

இதனால் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க முகமூடி பயன்படுத்துவதோடு வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவும் படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் பிரதமர் மோடி கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க கை குலுக்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு பதிலாக தமிழர்களின் கலாச்சாரமான கும்பிட்டு வரவேற்கும் பழக்கத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார். இது தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெண்களை பாதுகாப்பதில் தமிழகம்தான் முதலிடம். – முதல்வர் பேச்சு

0

பெண்களை பாதுகாப்பதில் தமிழகம்தான் முதலிடம். – முதல்வர் பேச்சு

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் ஒரத்தூரில் நடந்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர், ஜி.எஸ் கல்வி குழுமத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்.விழாவில் முதல்வர் பேசியதாவது;

வருடந்தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாளான இன்று இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு பெருமை அடைகிறேன். தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிருக்காக உண்மையாக பாடுபடும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

இயற்கையின் படைப்பான நதிகளுக்கும், வழிபடும் தெய்வங்களுக்கும் பெண்களின் பெயரை வைத்து பெண்ணின் பெருமையை போற்றுகிறோம். நம் நாட்டையும் தாய்நாடு என்றுதான் அழைக்கிறோம், ஆண்கள் கல்வியறிவு கற்றால் அவரது குடும்பம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மட்டுமே முன்னேற முடியும். ஆனால் ஒரு பெண் கல்வியறிவு பெற்றால் சமுதாயத்தையும், நாட்டையும் உயர்த்துவார்கள். மாதவராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகளை நினைவூட்டினார்.

பெண்கள்தான் நம் நாட்டின் கண்கள், பெண்களின் முன்னேற்றமே தமிழகத்தின் முன்னேற்றம் என்ற நலனைக் கருதி தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தேவையான வகையில் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழகம்தான் முதன்மையாகவும், முன்னோடியாகவும் விளங்குகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

இவ்விழாவை அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். இ.ஜி.எஸ் கல்விக் குழுமத்தின் முதன்மை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பல்வேறு அதிமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

தந்தை திருமணம் செய்ய இருந்த பெண்ணுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட மகன் : குழப்பத்தில் குடும்ப உறுப்பினர்கள்!

0

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு சித்தரஞ்சன்(வயது 43) என்ற ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு மகன்கள் ஒருவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் மற்றொருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயதிலேயே தாயை இழந்த மகன்களை இவர்தான் வளர்த்து வந்துள்ளார். இவரது மூத்த மகன்(வயது 19) ஹாஸ்டலில் தங்கி கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறார். இளைய மகன்(வயது 16) தன் கிராமத்தில் அருகாமையில் உள்ள அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் அவரது இளைய மகன் பைக்கில் செல்லும் போது சிறு விபத்து ஏற்பட்டது. இதனால் மகனை வீட்டிலேயே ஓய்வெடுக்க வைத்து வந்தார் சித்தரஞ்சன்.

இதற்கிடையில் அவரது அக்காவின் குடும்பம் பெரும் விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் அக்கா மற்றும் அவரது கணவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

அவர்களது ஒரே மகள்(வயது 20) தாய் தந்தையின்றி தனியாக வசித்து வரும் நிலை ஏற்பட்டது. இதை பார்த்த சித்தரஞ்சன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

அந்தப் பெண் தொடர்ந்து இவ்வாறு இருக்க முடியாது என்பதால் அவளுக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணை வெளியில் கொடுக்க மனமில்லாத சித்தரஞ்சன் தனது சித்தப்பா மகனுக்கு (வயது 30) திருமணம் செய்ய திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தார்.

ஏற்கனவே விபத்தில் சிக்கி காயமுற்று இருந்த இளைய மகனை குளிப்பாட்டுவது முதல் அனைத்து உதவிகளையும் அந்தப் பெண் உடனிருந்து செய்து வந்தாள். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களில் அவர் இளையமகன் முழுவதும் குணமடைய அந்தப் பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை யாருக்கும் தெரியாமல் இருவரும் மறைத்து வந்துள்ளனர்.

இது பற்றி எதுவும் தெரியாத சித்தரஞ்சன் திருமண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் திருமணத்திற்கு மறுத்த அந்த பெண் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.

மேலும் தனது மாமாவின் மகனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியுள்ளாள். சித்தரஞ்சனின் தம்பிக்கும் அந்த பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

நிச்சயதார்த்தம் நடந்த சில வாரங்களில் அந்தப் பெண் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாள். உடனே உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர் அவள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இது சித்தரஞ்சன் மற்றும் அந்த பெண்ணின் உறவினர் களுக்கு இடையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கும்போது சித்தரஞ்சனி இளைய மகன் தான் காரணம் என்று கூறியிருக்கிறாள். இதைக்கேட்ட உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

சூழ்நிலையை புரிந்து கொண்ட உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். அதோடு சித்தரஞ்சனி இளைய மகன் 18 வயதை கடந்த பிறகு திருமணம் செய்யலாம் என்று உபதேசிக்கப் பட்டது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட உறவினர்கள் அந்தப் பெண்ணின் வயிற்றில் பலரும் கருவை என்ன செய்வது என்று குழம்பியுள்ளனர். காரணம் அவரது இளைய மகன் தற்போது திருமணம் செய்ய இயலாது அதனால் தீர்வு காணமுடியாமல் உள்ளனர்.

திமுகவின் கோட்டைக்குள் வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய முதல்வர் பழனிச்சாமி : பாராட்டி மகிழ்ந்த பொது மக்கள்!

0

திமுகவின் கோட்டைக்குள் வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய முதல்வர் பழனிச்சாமி : பாராட்டி மகிழ்ந்த பொது மக்கள்!

மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என்று விவசாயிகள் அஞ்சி வந்தனர். இதனால் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதற்கிடையில் கடந்த 20ம் தேதி ஒருங்கிணைந்த டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

மேலும் மார்ச் 7ம்தேதி(இன்று) முதல்வருக்கு பாராட்டு விழா ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதில் கலந்து கொள்ள முதல்வர் இன்று திருவாரூர் சென்றிருந்தார்.

அங்கு முதல்வர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வயலில் இறங்கி விவசாயிகளோடு சேர்ந்து நாற்று நட்டு மகிழ்ந்தார். இதனை பார்த்த விவசாயிகள் உற்சாகமடைந்த விவசாயிகள் கைதட்டி முதல்வருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு திருவாரூர் மாவட்டத்திலுள்ள சித்தமல்லி என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. முதல்வரை காண கூடியிருந்த பெருந்திரளான மக்கள் இதனை கண்டு முதலமைச்சரை வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.

திருவாரூர் பன்னெடும் காலமாக திமுக வின் கோட்டையாக இருந்து வந்தது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊர் மற்றும் ஆஸ்தான தொகுதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

திமுக-வின் கோட்டையாக விளங்கும் இந்த தொகுதியில் முதல்வர் பொது மக்களின் பாராட்டுகளை பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை அரசியல் விமர்சகர்கள் முதல்வர் பழனிசாமி திமுகவின் தொகுதியிலேயே மக்களின் பாராட்டுகளை பெறுவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறியுள்ளனர்.

அமைச்சர் பெயரால் பண மோசடி – சிக்கினார் சீட்டிங் மன்னன்

0

அமைச்சர் பெயரால் பண மோசடி – சிக்கினார் சீட்டிங் மன்னன்

அரசியல் கட்சிகள் தங்களின் தலைவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழாவிற்காக கடைகளில் அடித்து மிரட்டி பணம் வசூலித்த சிசிடிவி காட்சி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

கடந்த பிப்ரவரி 24 ஆம் நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளீ விழா கொண்டாடப்பட்டது.இதனை பயன்படுத்தி சென்னையை சார்ந்த முகமது ரபீக் என்பவர் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக கூறி கிண்டியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் தொழிலதிபரிடம் 85 இலட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.

கேட்ட பணத்தை தராவிட்டால் தொழில் நடத்த முடியாது என கூறி மிரட்டி உள்ளார்.இதனால் பயந்து போன தொழிலதிபர் அவர் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார்.அப்போது அந்த வங்கிக் கணக்கின் பெயர் ரகீம் என இருப்பதால் சந்தேகப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தனது ஓட்டுனரை அமைச்சர் ஜெயக்குமாரின் அலுவலகத்திற்கு அனுப்பி விசாரித்ததில் அவ்வாறு யாரையும் அமைச்சர் மிரட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரனை மேற்கொண்டதில் தமிழக்தில் பல இடங்களில் பண மோசடி செய்து வரும் ரகீம் என தெரியவந்துள்ளது.இவன் இதுவரை தமிழகம் முழுவதும் பல இடங்களில் சுமார் 10 கோடி அளவிற்க்கு மோசடியில் ஈடுபட்டு பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடையவன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் தொடந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

பேராசிரியர் அன்பழகன் மறைவை அடுத்து உடன்பிறப்புகளுக்கு திமுக வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0

கடந்த மாதம் இறுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மணி அளவில் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தகவல் வெளியிட்டது.

இந்த செய்தி திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் திமுக தனது கழக உடன்பிறப்புகளுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திமுகவின் கொடி அரை கம்பத்தில் பறக்க வேண்டும். மேலும் அடுத்த ஒரு வாரத்திற்கான திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு பேராசிரியர் அன்பழகனுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் கழக உடன்பிறப்புகள் மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கூடி வருகின்றனர்.

மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர் பேராசிரியர் அன்பழகன் : டாக்டர் ராமதாஸ் புகழாரம்

0

திமுகவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவர் பேராசிரியர் அன்பழகன். இவர் திமுகவின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகளாக இருந்து வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அவர் உடல்நிலை மேலும் குன்றியதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் திமுகவின் மூத்த உறுப்பினர்கள் அவரை சென்று நலம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக நேற்று தகவல் வெளியானது. உடனே திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்தார்.

மிகவும் மோசம் அடைந்த அவரது உடல் நிலையால் நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது. இது திமுக மற்றும் திராவிட கழகத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதன் பிறகு நள்ளிரவில் டாக்டர் ராமதாஸ் தனது இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

“திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

பேராசிரியர் அன்பழகன் மறைவிற்கு பல மூத்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரௌபதி படத்திற்கு எதிராக களமிறங்கிய பிரபல யூட்யூப் சேனல் : உண்மையை வீடியோவுடன் வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர்!

0

சமீபத்தில் வெளியான திரௌபதி படம் பல சர்ச்சைகளுக்கு நடுவில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. அதில் மிகவும் குறிப்பிடும்படியாக 300 தியேட்டர்களில் ஒரு வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் திரௌபதி கிரவுட் ஃபண்டிங் முறையில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்பதாகும். இந்தப் படம் கடந்த ஒரு வாரத்தில் தயாரித்த செலவை விட 20 மடங்கு வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அந்த படத்தின் இயக்குனர் மோகன் சினிமா வட்டாரத்தில் பிரபலமடைந்துள்ளார்.

இந்த வெற்றியின் காரணமாக இயக்குனர் மோகன் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களின் நேர்காணல்களில் கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில் பிரபல சினிமா மீடியாவின் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அந்த இயக்குனர் நேர்காணல் வழங்கியிருந்தார்.

அந்த நேர்காணலில் சர்ச்சைக்குரிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு இயக்குனர் மோகன் விளக்கம் அளித்தும் அதை ஏற்க மறுப்பது போல் கேள்விகள் கேட்கப்பட்டன.

மேலும் அவர் பிரபல இயக்குனர் மற்றும் ஒரு அரசியல் தலைவரை தாக்கியே படம் எடுத்துள்ளதாகவும் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதோடு நிறுத்தாமல் வேறு ஒரு அரசியல் கட்சியை இயக்குனர் மோகனுடன் தொடர்புபடுத்தி கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்தக் கேள்விகள் வேண்டுமென்றே தன்னை தாக்கி கேட்கப்படுவதாக கூறி இயக்குனர் அந்தக் நேர்காணலிலேயே கூறியிருக்கிறார். இதற்கு மேல் இந்த நேர்காணல் தொடர்ந்தால் அது நன்றாக இருக்காது என்று நன்றி கூறிய இயக்குனர் மோகன் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

இதனை அந்த பிரபல மீடியா நிறுவனம் இயக்குனர் பாதியிலேயே வெளிநடப்பு செய்தது போன்று சில காட்சிகளை நீக்கிவிட்டு ஒளிபரப்பியுள்ளது. இதைப் பார்த்த இயக்குனர் தான் அங்கிருந்து வெளிநடப்பு செய்யவில்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த செயலுக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கேட்கும் வரை தான் விடப்போவதில்லை என்று அதில் கூறியிருந்தார். இதற்கு அந்த மீடியா நிறுவனம் பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேராக சென்ற இயக்குனர் விளக்கம் தரும்படி கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நிறுவனம் அவர் நன்றி கூறி விடை பெற்ற காட்சிகள் பதிவாகவில்லை என்று மழுப்பலான பதில் அளித்தனர்.

அந்த வீடியோவில் அவர் வெளியேறி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது ஆனால் நன்றி கூறிய காட்சிகள் ஏன் பதிவாகவில்லை என்று நிகழ்ச்சியின் இயக்குனரிடம் கேட்டுள்ளார். இந்த நிகழ்வை தனது உதவியாளருடன் வீடியோவாக எடுத்த இயக்குநர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீயோவை சமூக வலைதளங்களில் பார்த்த நெட்டிசன்கள் அந்த மீடியா நிறுவனத்தின் மீது தங்கள் கோபத்தை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற நிறுவனங்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டிய திரௌபதி பட இயக்குனரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அவாளுக்கு மட்டும் தனி டாய்லெட்! இதுல கூட பிரிவினையா..? பொதுமக்கள் கண்டனம்!

0

அவாளுக்கு மட்டும் தனி டாய்லெட்! இதுல கூட பிரிவினையா..? பொதுமக்கள் கண்டனம்!

உலகத்தில் ஆண், பெண் என்ற வகையில் மட்டுமே தனித்தனியாக கழிவறைகள் கட்டப்படும். ஆண்களுக்கான கழிவறையை ஆண்களும், பெண்களுக்கான கழிவறையை பெண்கள் மட்டும் பயன்படுத்துவதே மனித நாகரிகத்தில் பொதுவாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கோயில் ஒன்றில் ஆண், பெண் மற்றும் பிராமணர் என்று மூன்று விதமான பெயர் பலகையுடன் தனித்தனியே டாய்லெட் முன்பு எழுதப்பட்டிருந்தது. இது ஆங்கில செய்தி ஒன்றில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பொது மக்களிடையே கண்டனத்திற்கு உள்ளானது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேள்விகேட்டபோது; அந்த பெயர் பலகை 25 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தது என்றும், கோவில் நிர்வாகிகள் அங்கு செல்வதில்லை என்றும் பதில் அளிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமே அந்த கழிவறைகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே அருவெறுக்கத்தக்க பிரிவினையை ஏற்படுத்தும் பலகையை உடனடியாக நீக்குவதாக என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

இச்சம்பவம் முன்பு நடந்திருந்தாலும் கழிவறையின் புகைப்படம் திடீரென்று இணையத்தில் பரவி பலர் மத்தியில் வெறுப்பையும் இதில் கூடவா இப்படி என்று பேசும் அளவிற்கு கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.