வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்

0
178
வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவும். ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை வங்காள தேசபிரதமருடன் இம்ரான் ஆன் கான் பகிர்ந்து கொண்டதாவும் கூறபட்டு உள்ளது.
ஏற்கனவே வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்திவரும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்து உள்ளன.
காஷ்மீர் குறித்து இந்த இரு நாடுகளிலிருந்தும் மாறுபட்ட அறிக்கைகள் வெளிவந்துள்ளன. வங்காள தேசத்தின் சுருக்கமான இரண்டு பத்தி அறிக்கையில் காஷ்மீரைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, இரு தலைவர்களும் கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் வங்காள தேச வெள்ளம் குறித்து விவாதித்ததாக கூறப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் எட்டு பத்தி அறிக்கையில், பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் குறித்த “பாகிஸ்தானின் பார்வையை பகிர்ந்து கொண்டார்” என்றும் “அமைதியான தீர்மானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்” என்றும் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து கவலைக்கு எந்த காரணமும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “வங்காளதேசத்துடனான  நமது  உறவுகள் நேர சோதனை மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. ஜம்மு-காஷ்மீர் மற்றும் அதன் அனைத்து முன்னேற்றங்களும் இந்தியாவின் உள் விவகாரங்கள் என்ற அவர்களின் நிலையான நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். இது அவர்கள் எப்போதும் எடுத்துள்ள நிலைப்பாடு” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறி உள்ளார்.
பிரதமர் ஷேக் ஹசீனா அலுவலகத்தில் பாகிஸ்தான் சார்பு குரல்கள் “மற்றும் காஷ்மீர்  பிரச்சினை எழுப்பப்படுவது” என்பது சிறப்பு கவலைக்குரியது. “ஷேக் ஹசீனா ஒரு லக்ஷ்மண கோட்டை மிகவும் தீர்க்கமான வழியில் கடந்துவிட்டார் என்று தோன்றுகிறது என கூறி உள்ளார். இம்ரான் கானுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு எந்தவிதமான பயணமும் வரவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Previous articleமுழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி
Next articleஅமெரிக்காவை தாக்கிய புயல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here