கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் உயிரிழப்பு! நாடு முழுவதும் ஏற்பட்ட பேரதிர்ச்சி!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய காரணத்தால் ,நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த நோயின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் அந்த நோய்க்கான தடுப்பு மருந்தும் தற்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அந்த விதத்தில் இந்திய நாடு முழுவதும் இந்த நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டமானது சென்ற 16-ஆம் தேதி முதல் ஆரம்பித்து நடந்து வருகிறது .முதல் கட்டமாக எல்லா மாநிலங்களிலும் இருக்கின்ற மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

கூட்டணி தொகுதி பங்கீட்டில் வேகமெடுக்கும் அதிமுக! நிதானமான பாஜக!

தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 150 தொகுதிகளில் தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது. மீதம் இருக்கின்ற 84 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க அதிமுக தரப்பு திட்டமிடுவதாக தெரிகிறது. அதோடு பாரதிய ஜனதாவிற்கு 38 தொகுதிகளை ஒதுக்கி தர ஆளும் தரப்பு அதிமுக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பாஜக இந்த விஷயத்தில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருவேளை பாஜகவிற்கு 38 சீட்டுகளை … Read more

ரத்தாகும் விவசாய கடன்? எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 18ஆம் தேதி நேற்றைய தினம் டெல்லிக்குச் சென்றார் சென்னையில் இருந்து விமானம் மூலமாக டெல்லி போனவருக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அங்கே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, போன்ற முக்கிய தலைவர்களை முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல தமிழக அரசின் சார்பாக ஒரு சில கோரிக்கைகளும் மத்திய அரசிடம் வழங்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல அதிமுக ,மற்றும் பாஜக, கூட்டணி குறித்து … Read more

கமலைக் கலாய்த்த முன்னாள் அமைச்சர்! எதற்காக தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுக்கள் கூட எதிர்வரும் தேர்தலில் கமலஹாசனுக்கு கிடைக்கப்போவதில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் உடைய பிறந்தநாள் விழாவில் பேசிய வைகைச்செல்வன் வாடகை கேட்ட காரணத்தால் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக என்னிடம் வாடகை எதுவும் கேட்காதீர்கள் நான் அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்தார். அதேபோல டிடிவி தினகரன் இதுவரையில் உலக அரசியல் வரலாற்றில் வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே … Read more

ஸ்டாலினும் ரஜினியும் ரகசியக் கூட்டா? அம்பலமானது ரகசியம்!

ரஜினியின் மக்கள் மன்றத்தின் உடைய 4 மாவட்ட செயலாளர்கள் சென்ற 17ஆம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் .அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், திமுகவில் இணைவது தொடர்பாக ரஜினிகாந்திடம் அவருடைய கருத்தை கேட்டோம், அவரும் உங்களுக்கு விருப்பம் என்றால் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைத்துக்கொண்டு உங்கள் பணியை தொடருங்கள் அதற்கு நான் எந்தவிதத்திலும் … Read more

சசிகலாவின் கருணையால் முதல்வரான எடப்பாடி! ஸ்டாலின் விளாசல்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட குரும்பம்பட்டி ஊராட்சியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.. அந்த சமயத்தில் அவர் பேசியதாவது, இங்கே வந்திருக்கும் மக்களாகிய நீங்கள் ஏதோ உங்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதைப்போல வந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறீர்கள். அதனால் எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிய தயாராகி விட்டதாக நினைக்கிறேன் என்று தெரிவித்தார். அதோடு இதுவரையில், முதல்வராக இருந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கும் சரி இந்த எடப்பாடி தொகுதிக்கும் சரி என்ன … Read more

அதிமுகவில் சசிகலாவிற்கு பொதுச்செயலாளர் பதவியா? துணை முதல்வர் போட்ட திடீர் குண்டு!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைய 73 ஆவது பிறந்த பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடலாம் என்று அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் ஆர். பி உதயகுமார் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் பங்கு பெற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது, வருடா வருடம் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பது அம்மா … Read more

விஜயபாஸ்கரின் உதவியாளர் சிபிஐ வளையத்திற்குள்? விளக்கம் அளித்த சிபிஐ அதிகாரிகள்!

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்யின் உதவியாளர் சரவணன் விசாரணை செய்வதற்கு சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் எங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் பின்னணியை வைத்து பார்த்ததே பத்திரிக்கையாளர்களின் வாடிக்கையாகி விட்டது என்று தெரிவிக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சமீபத்தில் அதிமுக பிரமுகர் மீது நாங்கள் எடுத்த நடவடிக்கை கூட இவ்வாறு தான் அனைத்து பத்திரிகைகளும் அரசியல் பின்னணி தான் காரணம் என்று தெரிவித்தது. ஆனால் உண்மையில் … Read more

ஜெகத்ரட்சகன் எடுத்த அதிரடி முடிவு! மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றம்!

திமுகவை சார்ந்த ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணைய போவதாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ,இதனை மறுத்த அவர் நான் இறக்கும் வரையில் திமுகவில் தான் இருப்பேன் என உறுதியுடன் கூறி வந்தார். அதற்கு பலன் அளிக்கும் விதமாக ஜெகத்ரட்சகன் புதுச்சேரி மாநில முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் திமுகவின் தலைவர் ஸ்டாலின்.. பாண்டிச்சேரி மாநிலத்தில் தற்சமயம் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியில் அமரவேண்டும் என்று முடிவு … Read more

தமிழக அரசியலில் எடப்பாடியின் ஆளுமை! அதிர்ந்து போன மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா!

தமிழகத்திலே சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய தின டெல்லி பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயணமானது தமிழக அரசியலில் முதல்வரின் ஆளுமையை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். இதனைத் தொடர்ந்து நடக்க இருக்கும் நிகழ்வுகள் திமுக போன்ற முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும் என்ற காரணத்தால், அரசியல் நோக்கர்கள் இந்த பயணத்தை மிகவும் கவனத்துடன் பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து ஒரு சிலரிடம் உரையாடியபோது, ஆளும் … Read more