எங்கள் போராட்டம் வெல்லும் வரை ஸ்லீப்பர் செல்கள் பணிகள் தொடரும்! டிடிவி தினகரன் அதிரடி!

சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டி வரும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவின் தலைமையால் அதிரடியாக நீக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் டிடிவி தினகரன் அவர் செய்ததெல்லாம் தவறு என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் எங்களுடைய கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பும் சமயத்தில், அவருடைய காரில் அதிமுகவின் … Read more

மாணவர்களுக்கான இலவச இணையம்! இன்று முதல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டில் கல்லூரியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு தினந்தோறும் 2 ஜிபி இன்டர்நெட் வழங்குவதற்கான திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிகிறது. இணையதள வகுப்புகளின் மூலமாக கல்லூரி மாணவ, மாணவிகள், படிக்க உதவி செய்யும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு இந்த இலவச இணையதள வசதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், ஏப்ரல் மாதம் வரையில் தினம்தோறும் 2ஜிபி … Read more

சாது மிரண்டால் காடு கொள்ளாது! பாமகவின் அதிரடியால் மிரண்டு போன அதிமுக எடுத்த முக்கிய முடிவு!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக சென்ற டிசம்பர் மாதத்தில் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தது பாட்டாளி மக்கள் கட்சி. பலகட்ட போராட்டங்களை நடத்திய அந்தக் கட்சி தற்சமயம் தமிழக அரசுக்கு வரும் 3ஆம் தேதி வரை கெடு விதித்து இருக்கிறது. வன்னியர்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு உறுதியான முடிவை எடுக்கவில்லை என்றால் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எச்சரிக்கை … Read more

சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டிய விவகாரம்! சி.வி.சண்முகம் ஆவேச பேட்டி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்ற 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை பெற்றார். ஆனாலும் சிறையில் இருந்த சமயத்தில் சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர் அந்த மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த சில … Read more

மருத்துவர் ராமதாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! தைலாபுரம் தோட்டத்துக்கு ஓடிவந்த தமிழக அமைச்சர்கள்

Dr Ramadoss Master Plan for Vanniyar Reservation 2021

மருத்துவர் ராமதாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! தைலாபுரம் தோட்டத்துக்கு ஓடிவந்த தமிழக அமைச்சர்கள் வன்னியர் சமுதாயம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ளதால் அந்த சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் கடந்த 40 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் … Read more

இந்த பட்ஜெட் நாட்டிற்கு மிகவும் முக்கியம்! எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடப்பதற்கு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைப்பதற்கு இந்த வருடம் முக்கியமாக இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன் … Read more

விசிகவினர் செய்த அராஜகம் -விசிகவின் கொடி கம்பத்தை பிடிங்கி எரிந்த மக்கள்.

விசிகவினர் செய்த அராஜகம் -விசிகவின் கொடி கம்பத்தை பிடிங்கி எரிந்த மக்கள். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் கொடிக் கம்பத்தை மதுரை உசிலம்பட்டியில் உள்ள மக்கள் பிடுங்கி எறிந்து உள்ளார்கள். அதாவது மதுரையில் உள்ள உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் விசிக வினர் தங்களுடைய கொடிக் கம்பத்தை புதிதாக அமைத்துள்ளார்கள். இதற்கு அந்த பஸ் நிலையத்திற்க்கு அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்கம் இது எங்கள் … Read more

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் கதகளி ஆடும் கருணாஸ் குழப்பத்தில் அதிமுக !

சசிகலாவை நான் சந்திப்பதற்கான அழைப்பு நிச்சயமாக வரும் அவரை உறுதியாக சந்திப்பேன் என்று நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான திருவாடானை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார். முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பாக தேசிய தெய்வீக பிரச்சாரத்தை உருவாக்கிய அந்த அமைப்பின் தலைவர் கருணாஸ் சட்டசபை உறுப்பினர் சூலூர், பள்ளபாளையம், சிந்தாமணிபுதூர், போன்ற இடங்களில் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர் 1994ஆம் வருடம் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில், எங்களுடைய … Read more

அர்ஜுன மூர்த்தி பின்னால் இருந்து இயக்கும் பாஜக!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களின் வாக்குகள் திமுகவிற்கு சென்று விடக்கூடாது என்பதை மனதில் வைத்து அர்ஜுன மூர்த்தியை பாஜகதான் மறைமுகமாக இயங்கி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அண்மையில் கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார் ரஜினிகாந்த். இதனை நம்பி அவருடைய ரசிகர்களும் ரஜினிகாந்தின் அறிவிப்பதற்காக காத்திருந்தார்கள். அவர் … Read more

பகுத்தறிவு பேசும் ஸ்டாலின் துவக்கி வைத்த முருகப் பெருமான் விளையாட்டு அளப்பரியது எச் ராஜா!

சிவகங்கை அருகே பாஜகவின் மூத்த தலைவர் எச் .ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, உலகில் இருக்கக்கூடிய எல்லாவிதமான ஊழல்களையும் செய்திருக்கும் ராசாவிற்கு என்னை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? 2ஜி வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்வது வெகு தொலைவில் இல்லை பகுத்தறிவு பேசும் ஸ்டாலினை வேல் பிடிக்க வைத்த தமிழ் கடவுள் முருகனின் விளையாட்டு அளப்பரியது. தமிழ்நாட்டில் தமிழ் கடவுள் முருகனின் புரட்சியானது தொடங்கிவிட்டது. என்று தெரிவித்தார். அதேபோல முருகப்பெருமானின் பக்தர்கள் … Read more