சந்திரோதய கௌரி விரதம்

0
80

புரட்டாசி மாதம் தேய்பிறை திருதியை தினத்தன்று சந்திரோதய கௌரி விரதம் கடைபிடிக்க வேண்டும். அதன்படி புரட்டாசி மாத தெய்வத்தன்று மாலை உதயமான பிறகு இரவு 7 மணிக்கு பின்னர் சந்திரனின் கிரகணங்கள் விழும் இடத்தில் அம்மனை வணங்க வேண்டும். ஒரு கலசத்தில் தேங்காய் மாவிலை வைத்து அலங்காரம் செய்து அதில் அம்பாளை ஆவாகனம் செய்து, அம்பாலின் பக்தி பாடல்களை பாடி தூப, தீபங்கள் காட்டி நிவேதனங்கள் செய்து இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

கௌரியின் பெயரில் பல்வேறு விரதங்கள் ஒரு வருடம் முழுக்க கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு கௌரி விரதத்தின் பலனும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விரதத்தால் மன குழப்பங்கள் நீங்கும். தீர்மானங்களை விரைவில் எடுக்கும் சூழ்நிலை உண்டாகும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். சுப காரிய தடைகள் குறிப்பாக திருமண தடைகள் நீங்கும்.

மனதில் இருக்கின்ற கெட்ட எண்ணங்கள் அகலும். வாழ்க்கையில் அனைத்து விதத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.