தன் படங்களை ஆபாச படங்களுடன் ஒப்பிட்ட சர்ச்சை இயக்குநர்!!

0
34
#image_title

தன் படங்களை ஆபாச படங்களுடன் ஒப்பிட்ட சர்ச்சை இயக்குநர்!!

சர்ச்சை இயக்குநரான அனுராக் காஷ்யப் அவர்கள் தற்போது மீண்டும் தனது சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்கள் கையில் வசமாக சிக்கி உள்ளார். தனியார் நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அனுராக் காஷ்யப் அவர்கள் இந்தி திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்து கொண்டியிருக்கிறார். அனுராக் காஷ்யப் ராம் கோபால் வர்மாவின் சத்யா (1998) என்ற படத்தில் இணை எழுத்தாளராக தனது திரைப் பயணத்தை தொடங்கினார். இப்படம் 1998ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு ‘பாஞ்ச்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் இப்படம் சென்சார் கமிட்டியில் இன்று வரை வெளிவர முடியாமல் சிக்கி படமும் வெளிவராமலையே போனது. பின்னர் 2004ம் ஆண்டு அவர் இயக்கிய பிளாக் ஃப்ரைடே படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இது 1993 ஆம் ஆண்டு பம்பாய் குண்டுவெடிப்பு சம்பவங்களை பற்றி கூறும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அனுராக் காஷ்யப் அவர்கள் எப்போதும் வெளி மேடைகளிலும், சினிமா விழாக்களிலும் ,தொலைக்காட்சி நேர்காணலிலும் சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசுவதை வழக்கமாக கொண்டவர்.

தற்போது கூட தனியார் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது படங்களையும், தன்னையும் ஆபாச படங்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். தன் படங்களை யாரும் திரையரங்குகளில் சென்று பார்க்கவில்லை என்றும் ரகசியமாகத் தான் படங்களை பார்ப்பதாகவும், திருட்டுத்தனமாகவும் தான் தன் படங்களை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ஆகையால் ஆபாச படங்களை போல தன் படங்களையும் ரகசியமாக பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டி பேசி உள்ளார். இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்களின் சர்ச்சை பேச்சு, குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K