மள மளவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஊரடங்கை நோக்கி தமிழகம்

0
82

அதிகரிக்கும் கொரானா பாதிப்பு. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த நாட்களில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்றுடன் தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20246 ஆக உயர்ந்துள்ளது.
இன்றுமட்டும் சென்னையில் மட்டும் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 11362 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் கொரானா பரவலைச் சார்ந்தே பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயத்தில் குணமடைந்து வெளியே அனுப்பப்படும் நபர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் டிஸ்சார்ஜ்(Discharge) எண்ணிக்கை 11,000ஐ எட்டியுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அதை நேரத்தில் பலி எண்ணிக்கை
தமிழகத்தில் 8776 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 9 பேர் பலியாகி உள்ளனர்.

இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 141 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஜூன் மாதமும் ஊரடங்கு நீடிக்கும் என அனைவராலும் பேசப்படுகிறது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்ய நினைத்தது கொரானா நோயாளிகளை அச்சம் கொள்ளவைத்தது‌.

author avatar
Parthipan K