கர்ப்பிணிகளை ஏன் கோரோனா தாக்கவில்லை? தமிழ் கலாச்சாரமும் அதன் பின்னணியும்!

0
242

நமது மூதாதையர்கள் அந்த காலத்திலேயே அறிவியலில் சிறந்து வழங்கியுள்ளனர். நம் நாட்டில் பெண்கள் தாலி அணிவது கலாச்சாரமாக இருந்து வருகிறது.

நம் நாட்டில் பெண்கள் தாலிக் கயிற்றில் மஞ்சள் புசுவது நம் பாரம்பரியமாகும். அந்த பழக்கத்திற்கு பின்னால் மிகப்பெரிய ஆச்சரியம் ஒளிந்துள்ளது.

பெண்கள் குளிக்கும் போது மஞ்சளை தாலிக்கயிறு மற்றும் முகத்தில் புசுவார்கள். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அதிலும் குறிப்பாக திருமணமான பெண்கள் அடுத்த சில மாதங்களில் ஒரு கருவை சுமக்கிறாள். அந்த கால கட்டத்தில் பெண்கள் நோய் தொற்றாமல் இருப்பது அவசியமாகும். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் கர்ப்பிணி பெண்களை நோய் தாக்காமல் காக்கிறது.

கடந்த காலங்களில் பெண்கள் மஞ்சள்கயிற்றை தாலியில் கோர்த்து அணிந்து வந்தனர். அக்காலத்தில் நம் நாட்டில் நிறைய சுகபிரசவங்கள் நடந்துள்ளது. எப்போது பெண்கள் தங்கத்தில் தாலி அணிய ஆரம்பித்தார்களோ அப்போதே சுகப்பிரசவங்கள் குறைந்து விட்டன.

இதே போல் முன்பெல்லாம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்ப்பட்டதில்லை. ஆனால் இப்போது எத்தனை பெண்களுக்கு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இன்றும் பெண்கள் கர்ப்பம் தரித்த பிறகு வெளியில் செல்லும் போது தலையில் வேப்பிலையை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிறந்த கிருமி நாசினியான வேப்பிலை கர்ப்பிணிகளை நோய் தொற்றில் இருந்து காக்கிறது.

வெளிநாட்டு விஞ்ஞானிகள் வேம்பு மற்றும் மஞ்சளின் மருத்துவ குணங்களை புரிந்து கொண்டு அவற்றை வியாபாரம் ஆக்கிவிட்டனர். ஆனால் பகுத்தறிவு பேசி இது போன்ற நல்ல பழக்கங்களை கைவிட்டு விட்டோம்.

தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நம் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் இருந்து வந்துள்ளன. இவ்வாறான பழக்கங்கள் நம்மை பல்வேறு நோய் தொற்றில் இருந்து காக்கும்.

Previous articleகொரோனா தொற்று 16 லட்சத்தை கடந்து அச்சுறுத்தல் : பதற வைக்கும் பட்டியல்!
Next articleதமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here