கோஹ்லி டி 20 உலகக்கோப்பையில் இடம்பிடிக்க இதை செய்தே ஆகவேண்டும்… பாக் வீரர் கருத்து

0
74

கோஹ்லி டி 20 உலகக்கோப்பையில் இடம்பிடிக்க இதை செய்தே ஆகவேண்டும்… பாக் வீரர் கருத்து

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது ரன்களை அதிகளவில் குவிக்க முடியாமல் தின்றி வருகிறார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதன் காரணமாக அவர் ஃபார்மை மீட்டெடுக்க சில தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடவில்லை. ஆனால் அடுத்து நடக்க உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் களமிறங்குமார் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அதிலும் அவர் இடம்பெறவில்லை.

இதையடுத்து ஆசியக்கோப்பை தொடரில் கோலிக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் அடுத்து நடக்கும் டி 20 உலகக்கோப்பை தொடருக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களே உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் கோலி இடம்பெற இந்த தொடரில் அவர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். மேலும் “அவரைப் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்து அவர் விளையாடாமல் போய்விட்டால் கடினமாகிவிடும். பாகிஸ்தான் அணி கோலியைப் பார்த்து பயப்படுகிறது. அவர் தன்னுடைய பழைய ஆட்டத்தை மீட்டெடுத்துவிட்டால் அது எதிரணிகளுக்கு தொல்லையாக போய்விடும்” எனக் கூறியுள்ளார்.