தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவும் டெல்டா வைரஸ்! 85 நாடுகளில் வேகமெடுக்கும் கொரோனா!

0
82

கடந்த சில நாட்களாக இஸ்ரேலில் தடுப்பூசி போட்டு வளர்க்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது இதற்கு டெல்டாப் வகை வைரஸ் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தான் முதன்முதலில் டெல்டா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது மற்ற வகைகளை விட அதிகமாக தொற்றும் தன்மை கொண்டதாக தெரிகிறது. இந்த வைரசால் தீவிரமாக பாதிக்கப் படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை 85 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் பரவல் நீடித்தால், உலகம் பெரும் பாதிப்பை சந்திக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

செக்ஸ்வீடியோ இந்நிலையில் இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்னவெனில் இஸ்ரேலில் 8 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 6 ஆயிரம் மேற்பட்டோர் பலியாகினர். ஒரு சில மாதங்களில் வெகுவாக குறைந்ததால் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் இந்த டெல்டா வகை வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனாவின் இந்த புதிய பரவலுக்கு காரணம் டெல்டா வைரஸ் தான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் தொடர்ந்து பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு மேலும் பல வகையான தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

author avatar
Kowsalya