தீராத மூட்டு வலி உங்களுக்கு உள்ளதா… முள்ளங்கி கீர் குடித்து பாருங்க…

0
34

தீராத மூட்டு வலி உங்களுக்கு உள்ளதா… முள்ளங்கி கீர் குடித்து பாருங்க…

உங்களுக்கு தீராத மூட்டு வலி இருந்தால் அந்த மூட்டு வலியை குணமாக்கும் இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

நம்மில் பலருக்கு இந்த மூட்டு வலி பிரச்சனை இருக்கின்றது. அதுவும் வயதானவர்களுக்கு மூட்டு வலி என்பது தீராத ஒரு வியாதியாகவே இருக்கும். இந்த மூட்டு வலியை குணமாக்க பல வகையான தைலங்களை பயன்படுத்தி இருப்போம். ஆயில்மென்ட் பயன்படுத்தியும் பயன் தந்திருக்காது. இந்த பதிவில் மூட்டு வலியை குணமாக்க ஒரே ஒரு பொருள் போதும்.

அந்த ஒரு பொருள் முள்ளங்கி ஆகும். நம் வீட்டில் முள்ளங்கி சாம்பார், குழம்பு வைத்தால் நம் யாருக்கும் பிடிக்காது. அதிலிருந்து வரும் வாசத்தால் அதை நாம் சாப்பிடமாட்டோம். ஆனால் இந்த முள்ளங்கியில் உடலுக்கு தேவையான பல ஊட்டச் சத்துக்கள் உள்ளது.

பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நமக்கு பிடிக்காத முள்ளங்கியை வைத்து மூட்டு வலியை நீக்க நாம் இந்த பதிவில் சிறப்பான வீட்டு வைத்திய முறையை பற்றி தெரிந்து கொள்வோம். முள்ளங்கியை கீராக அதாவது ஒரு பானமாக தயாரித்து குடித்து வருவதன் மூலமாக மூட்டு வலியை குணமாக்கலாம்.

முள்ளங்கி கீர் தயார் செய்ய தேவையான பொருள்கள்…

* முள்ளங்கி
* தேங்காய்
* நாட்டு சர்க்கரை
* ஏலக்காய்த் தூள்

செய்முறை…

முதலில் முள்ளங்கியை எடுத்து துருவி வைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காயையும் துருவி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்சி ஜார் எடுத்து அதில் துருவி வைத்துள்ள முள்ளங்கி, தேங்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஏலக்காய் தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியாக சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக் கொண்டால் முள்ளங்கி கீர் தயார்.

இந்த முள்ளங்கி கீரை தயார் செய்து குடித்து வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் எல்லாம் குணமாகும். மேலும் நமது உடலில் நச்சுக்களை நீக்கி புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கின்றது.