உங்களுக்கு மருக்கள் இருக்கின்றதா… 50 பைசா செலவில் மருக்களை நீக்கலாம்…

0
57

உங்களுக்கு மருக்கள் இருக்கின்றதா… 50 பைசா செலவில் மருக்களை நீக்கலாம்…

நமது உடலில் இருக்கும் மருக்களை நீக்க வெறும் 50 பைசா செலவில் மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். இந்த மருந்தை எவ்வாறு தயாரிப்பது, எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மருக்கள் நம் உடலில் பல காரணங்களால் ஏற்படுகின்றது. சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த மருக்கள் நம் உடலில் ஏற்படுகின்றது. சருமத்தில் வைரஸ் கிருமிகளின் தாக்கம், வயது முதிர்வு காரணமாக கூட மருக்கள் ஏற்படும். இந்த மருக்களை எவ்வாறு நீக்க தோவையான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மருக்களை நீக்கும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

* அம்மன் பச்சரிசி இலை
* வெங்காய விழுது
* மஞ்சள் பொடி
* எருக்கன் இலை பொடி
* எருக்கன் பூ பொடி
* கடுகு எண்ணெய்

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

அம்மன் பச்சரி இலைகளை ஒரு உரலில் போட்டு நன்கு இடிக்கவும். பின்னர் இதில் தேவையான அளவு வெங்காய விழுதை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் மஞ்சள் பொடி, எருக்கன் இலை பொடி, எருக்கன் பூ பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இதில் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருக்களை வலிகள் இல்லாமல் மறைய வைக்கும் மருந்து தயாராகி விட்டது.

இதை பயன்படுத்தும் முறை…

இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முதலில் வேப்ப மரத்தின் இலை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் இந்த மருந்தை சிறிதளவு எடுத்து வைத்து மருக்கள் உள்ள இடத்தில் வைத்து ஒட்டி விட வேண்டும். இதனால் நம் உடலில் உள்ள மருக்கள் அனைத்தும் அப்படியே உதிர்ந்து விடும்.