வீட்டில் பணம் தங்குவதே இல்லையா?? தயவு செய்து இந்த தவறை செய்யாதீர்கள் செய்தால் பணம் தங்கவே தங்காது!!

0
31

வீட்டில் பணம் தங்குவதே இல்லையா?? தயவு செய்து இந்த தவறை செய்யாதீர்கள் செய்தால் பணம் தங்கவே தங்காது!!

இன்றைய சூழ்நிலையில், பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். நான் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், நம்முடைய நேரம் காலம் சாதகமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால், ஒருவர் என்னதான் பணம் சம்பாதித்தாலும், வீட்டில் தங்கவே தங்காது. எனவே, நாம் சம்பாதிக்கும் பணம் நல்ல முறையில் வீட்டிற்கு வரவும் வந்தப் பணம் வீண் விரையம் இல்லாமல் நம் கையிலே தங்கி இருக்கவும் சில வழிமுறைகள் உள்ளது.

ஒரு வீட்டில் மகாலட்சுமி தங்க வேண்டும் அப்பொழுதுதான் பணம் செல்வம் மகிழ்ச்சி என்று அனைத்தும் இவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் கட்டாயம் மகாலட்சுமி வீட்டில் இருக்க வேண்டும்.

மகாலட்சுமி இல்லையென்றால் இவை அனைத்தும் இழந்ததாய் வீடு மாறி நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் எதுவும் நம் கையில் இருக்காது எப்படி அதைவிட வேகமாய் செலவாகிவிடும்.

ஒரு சிலர் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது.அதற்கு அவர்கள் வீட்டில் இருக்கும் அபச குணம் கூட காரணமாக இருக்கலாம்.

அபசகுணமான பொருட்கள் நிறைந்த வீட்டில் லட்சுமி தேவி தங்குவதில்லை.ஆகவே உங்கள் வீட்டில் சந்தோஷமும், செல்வமும் நிறைந்திருக்க வேண்டுமென நினைத்தால், பின்வரும் பொருட்களை உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.

முன்னோர்கள் கூறியிருப்பதை நாம் கேட்டிருப்போம் ஒரு மூன்று பொருட்களை யார் கொடுத்தாலும் நாம் கட்டாயமாக வாங்கவே கூடாது.

அது யாராக இருந்தாலும் சரி நம் சொந்தக்காரர் நண்பர் உறவினர் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் இதுபோன்ற யாராக இருந்தாலும் கட்டாயம் இந்த மூன்று பொருட்களை மட்டும் வாங்கிடவே வாங்கிடாதீர்கள்.

அப்படி நீங்கள் அவர்கள் கொடுக்கிறார்கள் என்று வாங்கினால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி தங்கவே தங்காது.

இந்த தவறை நீங்கள் செய்தால் உங்கள் வீட்டில் எப்பொழுதும் பணம் செலவாகிக் கொண்டே இருக்கும்.

உப்பு: நம் வீட்டில் உப்பு இல்லை என்றால் கடையில் சென்று கூட வாங்குங்கள் ஆனால் மற்றவர்களிடமிருந்து உப்பை எப்பவும் வாங்காதீர்கள். இந்த உப்பில் தான் மகாலட்சுமி முழுவதுமாக நிறைந்திருக்கும். இந்த உப்பை வாங்குபவர்களுக்கு மட்டுமல்லாமல் கொடுப்பவர்களுக்கும் வீட்டில் மகாலட்சுமி தங்காது. ஒரு வீட்டில் பணம் தங்க வேண்டும் என்றால் கட்டாயம் உப்பை கொடுக்கவும் வாங்கவும் கூடாது.

எண்ணெய்: எண்ணெய் மறந்து கூட நீங்கள் யாரிடம் இருந்தும் வாங்காதீர்கள். ஏனென்றால் எண்ணெயில் தான் சனி பகவான் உள்ளார். இதனை மற்றவர்களுக்கு கொடுப்பதோ அல்லது வாங்குவதோ கூடவே கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் மகாலட்சுமி தங்காது.

இரும்பு பொருட்கள்: இரும்பு பொருட்கள் உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது என்றால் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் பயன்படுத்திய இரும்பு பொருட்களை வாங்குவதோ அல்லது நீங்கள் பயன்படுத்திய இரும்பு பாத்திரங்களை மற்றவர்களுக்கு கொடுத்தது கூடாது.

இந்த மூன்று பொருட்களையும் நீங்கள் கட்டாயமாக யார் கொடுத்தாலும் வாங்கி விடாதீர்கள். இவை அனைத்தையும் நீங்கள் சரியாக செய்தால் கட்டாயமாக உங்களது வீட்டில்பணம் தங்கும்.

author avatar
Parthipan K