இதை 3 நாட்களுக்கு மட்டும் குடித்து பாருங்க! அடைப்பட்ட நரம்புகளை திறந்து தளர்ச்சியை போக்கும்  அற்புத இயற்கை வைத்தியம்! 

0
155
#image_title

இதை 3 நாட்களுக்கு மட்டும் குடித்து பாருங்க! அடைப்பட்ட நரம்புகளை திறந்து தளர்ச்சியை போக்கும்  அற்புத இயற்கை வைத்தியம்! 

உங்கள் உடலில் உள்ள நரம்புகளில் பலவீனத்தை உணர்கின்றீர்கள? அப்படியெனில் இதை சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு விரைவில் குணமாகும்.

இதை சரியாக சாப்பிட்டு வந்தாலே போதும் உங்கள் உடலில் உள்ள நரம்புகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைத்து நரம்புகள் நல்லா ஆரோக்கியமாகவும் பலமாகவும் மாறும்.

உங்கள் உடலில் நரம்புகள் பலவீனமாக இருப்பதை எப்படி உணரலாம் என்றால் திடீரென உங்கள் கை கால்களில் இழுத்து பிடித்தல், மதமதப்பு, மரத்து போதல், உணர்வில்லாமல் இருத்தல், சுருக்கென்று அவ்வப்போது ஏற்படும் வலி போன்ற அறிகுறிகளினால் நமது நரம்பானது பலவீனமாக இருப்பதை உணரலாம்.

சில பேருக்கு இரவில் தூங்கும் பொழுது தொடையிலிருந்து கணுக்கால் வரை நரம்பு இழுத்துப் பிடித்து அதிகமான வலியை ஏற்படுத்தும். அந்த சமயங்களில் காலை அசைக்கக்கூட முடியாது. சிறிது அசைத்தாலும் கூட கரண்ட் ஷாக் பட்டது போல் சுருக் என்று வலி உண்டாகும்.

இதுபோல் வரும் பொழுது நாம் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. நரம்புப் பிரச்சினைகளில் முக்கியமானது சியாட்டிகா, வெரிகோஸ் வெயின், போன்ற பிரச்சனைகள் தான்.

*#* முதலில் சுத்தமான ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு துண்டு அளவு சுக்கை தட்டி சேர்க்கவும். சுக்கானது நரம்புகளில் ஏற்படும் வீக்கம், வலியை போக்கி நரம்பு அடைப்பை நீக்கக்கூடியது.

*#* அடுத்து 3 துண்டு லவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளவும். இது நரம்புகளில் உள்ள வலியை நீக்கி நரம்பு பலவீனத்தை போக்கக்கூடியது.

*#* அடுத்து ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்க்கவும். மஞ்சள் சரியான கிருமி நாசினி. மேலும் நரம்புகளில் உள்ள அடைப்புகளை நீக்குவதோடு, நரம்பு சுருளுவதை தடுக்கவல்லது. இவை மூன்றையும் சேர்த்து நன்கு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.

*#*

அடுத்து முதல் நாள் இரவு ஊறவைத்த 4 பாதாம் பருப்பை அரைத்துக் கொள்ளவும். இதில் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும். இதை ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அரைத்து வைத்த சுக்கு பட்டை பவுடரை சேர்த்து கலக்கவும்.

*#* இதை காலை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். அதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பு குடித்து வரவேண்டும். இதேபோல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வர உங்களுக்கு இருக்கும் அனைத்து விதமான நரம்பு பிரச்சனைகளும் சரியாகும்.