குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!!

0
151
Drunk father's act!! Screaming daughter sensational incident!!
Drunk father's act!! Screaming daughter sensational incident!!

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!!

பெண்களுக்கு இந்த காலத்தில் தினமும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. தினமும் பத்திரிக்கைகளிலும் ஊடங்களிலும் ஏராளமான இது போன்ற குற்ற செய்திகள் படித்தும் கேட்டும் வருகிறோம்.

அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது போன்ற பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி என்னும் பகுதியில் ஒரு நபர் வசித்து வருகிறார்.

நாற்பது வயதுடைய இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில், இவர் மது அருந்திவிட்டு வந்து பெற்ற மகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புகார் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையே குடி போதையில் மகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் தற்போது வெளி நபர்களால் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதை அடுத்து பெற்ற தந்தையே இது போல காரியங்களை செய்து வருவது இன்றைய காலத்தில் அதிகமாகி வருகிறது.

இதைத் தடுக்க போலீசார் எப்பொழுதும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.

author avatar
CineDesk