வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!! இனி கருத்தரிப்பு மையத்திற்கு போக வேண்டிய அவசியம் இல்லை!!

0
157
#image_title

வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!! இனி கருத்தரிப்பு மையத்திற்கு போக வேண்டிய அவசியம் இல்லை!!

 

தினமும் வெற்றிலை பாக்கு போடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்னென்ன நோய்களை இந்த வெற்றிலை பாக்கு குணப்படுத்தும் என்று பார்க்கலாம்.

 

வெற்றிலை பாக்கு என்பது தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு கலாச்சாரம். இது பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து காரியங்களிலும் முதன்மையாக இருக்கின்றது.

 

வெற்றிலை பாக்கிற்கு அதிக அளவு முக்கியத்துவம் இருக்கின்றது. ஏனென்றால் இந்த வெற்றிலை பாக்கில் பலவிதமான நோய்களை சரிசெய்யும் சத்துக்கள் உள்ளது.

 

இன்றளவில் பெருகி வரும் ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு இந்த வெற்றிலை பாக்கு நிரந்தரத் தீர்வை கொடுக்கின்றது என பரவலாக பேசப்படுகிறது. வெற்றிலையை ஆண்கள் போடும் பொழுது வெற்றிலையில் உள்ள ஹைட்ராக்ஸி சாவிகோல் என்னும் பினால் கலவை ஆண்களின் விதைப் பையை பலம் பெறச் செய்கின்றது.

 

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் சமமான அளவு எடுத்து சுவைக்கும் பொழுது மூளளையும் உடலும் சுறுசுறுப்பு அடைகின்றது. அதே நேரத்தில் இதயமும் வலுப்பெறுகின்றது.

 

வெற்றிலையால் குணப்படுத்தப்படும் நோய்கள்…

 

மலச்சிக்கல் குணமாக…

 

மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த வெற்றிலையை அரைத்து இரவு முழுவதும் தண்ணீரில் உற வைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். மேலும் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் குணமாகும்.

 

வாய் ஆரேக்கியத்திற்கு சிறந்த தீர்வு…

 

வெற்றிலையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பது, பிளேக், பல் சிதைவு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது.

 

உணவு உண்டவுடன் வெற்றிலையால் செய்யப்பட்ட பேஸ்டை மென்று சாப்பிடுவது மூலம் வாய் ஆரேக்கியம் பெறும். பல் வலி, ஈறு வலி, வீக்கம், வாய்த் தொற்று போன்றவற்றை குணப்படுத்துகின்றது.

 

சுவாச நோய்களுக்கு தீர்வு தரும் வெற்றிலை…

 

இருமல், மூச்சுக் குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை சரி செய்ய வெற்றிலை ஆயுர்வேதத்தில் சிறப்பாக பயன்படுத்தப்படுகின்றது. வெற்றிலைகளில் காணப்படும் கலவைகள் கபத்தை குறையச் செய்கின்றது. சுவாசத்தை மேம்படுத்த செய்கின்றது.

 

மன அழுத்தத்தை போக்கும் வெற்றிலை…

 

வெற்றிலையை மென்று சாப்பிடுவது மூலமாக மன அழுத்தத்தை குறைக்கலாம். வெற்றிலை உடலையும் மனதையும் தளர்த்துகின்றது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் பதட்டத்தையும் குறைக்கலாம்.

 

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெற்றிலை…

 

சர்க்கரே நோய் உள்ளவர்கள் வெற்றிலையை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்காமல் தடுக்கலாம். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த வெற்றிலையை சாப்பிடுவதால் அவர்களுக்கு பல பலன்கள் கிடைக்கும்.