இஸ்லாமிய பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவர்! திரெளபதி படத்தை நினைவுகூறும் அதிர்ச்சி சம்பவம்! அந்த பெண்ணிற்கு 1.5 லட்சம் சம்பளமாம்!

0
96

இஸ்லாமிய பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவர்! திரெளபதி படத்தை நினைவுகூறும் அதிர்ச்சி சம்பவம்! அந்த பெண்ணிற்கு 1.5 லட்சம் சம்பளமாம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த ஷபீர் என்பவர் தனது மகளான ஷாரிகா அஞ்சும் (21) கடத்தப்பட்டுள்ளதாக ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரில் கூறியிருப்பதாவது;

என்னுடைய மகள் ஷாரிகா அஞ்சும் சென்னை ஏர்போர்ட்டில் வேலை செய்கிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி ஆம்பூரில் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு 25 ஆம் தேதி அன்று மதியம் வேலைக்கு செல்வதாக கூறி சென்னைக்கு புறப்பட்டார். அன்று இரவே என் மகளுக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. உடனே ஷாரிகா தங்கியிருக்கும் விடுதிக்கு போன் செய்து வந்துவிட்டாரா என்று கேட்டதற்கு, இன்னும் வரவில்லை என்று பதில் கூறினர்.

உடனே நான் செனைக்கு சென்று தங்கு விடுதியில் நேரடியாக கேட்டதற்கு உங்கள் மகள் இங்கு வரவில்லை என்று கூறினார்கள். பிறகு வேலை செய்யும் இடத்திற்கு சென்று விசாரித்தேன் அங்கேயும் வரவில்லை என்று கூறினார்கள். பின்னர் பல இடங்களில் தேடிப்பார்த்தபோது குடியாத்தம் மோடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் என் மகளை கடத்திச் சென்றுள்ளார்.

நாங்கள் மோடிகுப்பம் சென்று அருண் என்பவரின் பெற்றோரிடம் என் மகளை காட்டுங்கள் என்று கேட்டதற்கு உன் மகளை காட்டமுடியாது, அவள் உங்களுடன் வரமாட்டாள் உங்களை பார்க்கமாட்டேன் என்று கூறிவிட்டாள் நீங்கள் போகலாம் என்று மிரட்டி அனுப்பிவிட்டார்கள். என் மகள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று பயமாக உள்ளது. ஐயா, உடனடியாக மோடிகுப்பத்தை சேர்ந்த அருண் என்பவரை அழைத்து விசாரித்து தக்க நடவடிக்கையின் மூலம் என் மகளை மீட்டுத்தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகாரில் ஷபீர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் “ஷாரிகா அஞ்சும்’ மாதம் 1.5 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆட்டோ டிரைவரான அருண் திட்டமிட்டு கூட்டிச் சென்றாரா என்பது விசாரணையின் பின்னரே தெரியவரும். இந்த சம்பவத்தை பார்க்கும் போது சமீபத்தில் வெளியான திரெளபதி படத்தில் வரும் நாடக காதல் சம்பவங்களை மேலும் உறுதிபடுத்துகிறது. பெண் பிள்ளையை பெற்றவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாததாக உள்ளது.

author avatar
Jayachandiran