கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! இன்றே ஆக்டிவேட் செய்து மோசடி கும்பலிடம் தப்பி கொள்ளுங்கள்!

0
61
Google's new invention! Activate today and escape the scam gang!
Google's new invention! Activate today and escape the scam gang!

கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! இன்றே ஆக்டிவேட் செய்து மோசடி கும்பலிடம் தப்பி கொள்ளுங்கள்!

கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.இந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு மோசடி கும்பல் பலவித டெக்னிக்கை உபயோகம் செய்து ஏதேனும் ஓர் நபருக்கு அழைப்பு விடுக்கின்றனர்.அந்த நபருக்கு வங்கியிலிருந்து அழைப்பதாக மோசடி கும்பல் அழைப்புவிடுக்கிறது.மக்களும் அதனை நம்பி எடிஎம் எண்,பாஸ்வார்டு இதர தகவல்களையும் தந்துவிடுகின்றனர்.இவற்றையெல்லாம் தந்துவிட்டு கடைசியாக OTP எண்ணையும் தந்துவிடுகின்றனர்.இதனால் அந்த மோசடி கும்பல் பல லட்சம் பணத்தை அவர்கள் அக்கவுண்டிலிருந்து அவர் கண்முன்னே திருடிவிடுகின்றனர்.

இந்த காரணத்தினால் அரசாங்கம் பலவித நடவடிக்கைகளை எடுத்தும் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு செய்தும் வருகிறது.தற்போது மக்கள் விழிப்புணர்வுடன் காணப்பட்டாலும் ஆங்காங்கே ஏமாந்தும் செல்கின்றனர்.அந்தவகையில் சேலம் மாவட்டம் கருப்பூர் என்ற ஊரை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வங்கி கணக்கில் இருந்த சேமிப்பு பணம்,பத்து லட்சத்தை மோசடி கும்பலிடம் பறிக்கொடுத்தார்.

தற்போது டெக்னாலாஜி வழியில் திருடுவதால் அந்த மோசடி கும்பலை கண்டுபிடிப்பது பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது.இதனால் தற்போது கூகுள் நிறுவனம் புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் படுத்தியுள்ளது.அதில் அந்நிறுவன கூறியதாவது,மக்கள் தினசரி பல காரணங்களுக்காக வங்கி பரிவர்த்தனையை செய்து வருகின்றனர்.இந்த பரிவர்த்தனையில் முக்கியமாக OTP அதாவது One Time Password என்பது தான்.ஏனென்றால் அந்த வங்கி பரிவர்த்தனை செய்பவர் உண்மையில் அவர் தனா என்பதற்கா இந்த OTP யை கேட்கிறது.

இந்த OTP யானது ஓர் முறை  தங்களின் செல்போன் எண்ணிற்கு வந்துவிட்டால்  மீண்டும் நீங்களே நீக்கும் வரை செல்போனிலிருந்து அழிவதில்லை.அந்த ஓர் OTP எண்ணானது மோசடி கும்பல் கையில் கிடைத்தால் உங்கள் வங்கி பரிவர்த்தனை என ஆரம்பித்து உங்க வங்கியின் மொத்த தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.இதனால் பல மக்கள் பாதித்து வருகின்றனர்.இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம்,இனி செல்போனிற்கு வரும் அனைத்து OTP எண்ணும் தனாக அதாவது 24 மணி நேரத்திற்குள் தானாகவே அழிந்துவிடும் டெக்னாலஜியை கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் மோசடி கும்பல் கையில் எந்தவித OTP எண்ணும் மாட்டுவதற்கு வாய்ப்புகள் இல்லை.இந்த திட்டமானது அடுத்த வாரத்திலிருந்து இந்தியாவில் செயல்படுவதாக கூறியுள்ளனர்.அத்தோடு கூகுள் நிறுவனம் கூறும் செட்டிங் வசதியை ஆக்டிவேட் செய்தால் மட்டுமே உங்கள் செல்போனில் இந்த டெக்னாலஜி உபயோகம் ஆகும்.