அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு! முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

0
74
Govt Employee Salary Cut in Kerala
Govt Employee Salary Cut in Kerala

அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு! முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.அந்த வகையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தான் கொரோனா தொற்றை தடுக்க உதவும் முக்கிய நடவடிக்கையாக சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில அரசும் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் விதமாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கேரளா அரசு சிறப்பான நடவடிக்கைகள் மற்ற மாநில மக்களும் பாராட்டும் வகையில் பெயர் பெற்றுள்ளது.

இதனையடுத்து மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் கேரளா மாடல் என்ற முன்மாதிரியும் கொரோனா தடுப்பு விஷயத்தில் உருவானது. இந்நிலையில் தான் திடீரென கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மேற்கொண்டு இருக்கும் ஒரு அதிரடி முடிவு பெரும் சர்ச்சையில் கொண்டு போய்விட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களின்  சம்பளத்தை கட் செய்ய அவர் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து மே முதல் செப்டம்பர் வரை 5 மாதங்களுக்கு அரசு ஊழியர்களின் 6 நாட்கள் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் பிடிக்க அவர் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலானது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.