சிறுமியை திருமணம் செய்ய நினைத்த தாத்தா & சித்தப்பா!  தாயும் உடந்தை  புகாரின் பேரில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்! 

0
211
#image_title

சிறுமியை திருமணம் செய்ய நினைத்த தாத்தா & சித்தப்பா!  தாயும் உடந்தை  புகாரின் பேரில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்! 

சிறுமியை திருமணம் செய்ய தாத்தா முயற்சி செய்ததுடன் அவரது சித்தப்பா சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு முதியவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் மகன் இறந்து விடவே ஆண் வாரிசுக்காக தான் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக மூத்த மகளிடம் முதியவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மூத்த மகள் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பதில் தனது 16 வயது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். முதியோரும் இதற்கு சம்மதித்து தனது உறவினர்களிடம் திருமணத்திற்கு உரிய சம்மதத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தனது சொந்த தாத்தாவிற்கு தன்னை திருமணம் செய்து வைப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி தன் அம்மாவின் தங்கை கணவரான சித்தப்பாவிடம் முறையிட்டுள்ளார். அதற்காக சிறுமியிடம் நீ ஒன்றும் பயப்பட வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதேபோல் சிறுமியிடம் வழக்கமாக பாலியல் ரீதியான உறவினை கொண்டுள்ளார். ஒரு நாள் தோட்டத்தில் தனிமையில் சிறுமியும் அவரது சித்தப்பாவும் இருப்பதை கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். அதற்கு சிறுமியின் சித்தப்பா ஆண் வாரிசுக்காக தானே உனது தந்தைக்கு சிறுமியை திருமணம் செய்ய நினைக்கிறாய்! ஆண் வாரிசு நானே பெற்றுத் தருகிறேன். எனக்கு அவளை திருமணம் செய்து வைத்துவிடு. மேலும் உனது வீட்டு செலவிற்கும் பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த கோரிக்கையை சிறுமியின் தாத்தாவும், தாயும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். எனவே நீங்கள் இருவரும் வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ தொடங்குங்கள். மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் பொய்யாக புகார் ஒன்றை அளித்து விடலாம் என முடிவு செய்யப்பட்டு அதன்படி புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு மேற்கண்ட உண்மைகள் தெரிய வரவே அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  மேலும் சிறுமியின் தாய் சித்தப்பா மற்றும் தாத்தா ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.