முடி வளரவே வளராது என நினைச்சுட்டு இருக்கீங்களா? இத பண்ணுங்க 100% ரிசல்ட்!

0
183
#image_title

அந்தக் காலத்தில் நாம் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்போம். வாரத்திற்கு இரண்டு முறை சீயக்காய் நன்கு அரைத்து தலைக்கு பூசி குளிப்போம். அதனால் முடிக்கு கிடைத்த ஊட்டச்சத்தால் முடி அதிகமாக வளர்ந்தது. உதிராமலும் இருந்தது. ஆனால் இன்றைக்கு ஷாம்பூ என்ற பெயரில் கெமிக்கலை பயன்படுத்தி முடியை வளர விடாமலேயே செய்து விட்டோம்.

 

இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் 10 நாட்களில் நீங்களே மாற்றத்தை உணரும் வகையில் இந்த ரிசல்ட் கண்டிப்பாக அமையும்.

 

பொருட்கள்:

 

டீ தூள் ஒன்றரை ஸ்பூன்

பெரிய வெங்காயத்தின் தோல்

 

செய்முறை:

 

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒன்றரை டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

3. இந்த தண்ணீரில் ஒன்றரை ஸ்பூன் டீ தூளை சேர்த்துக் கொள்ளவும்.

4. உரித்த 3 பெரிய வெங்காயத்தின் துள்ளிகள் சேர்த்துக் கொள்ளவும்.

5. ஒன்றரை டம்ளர் தண்ணீர் சுண்டி ஒரு டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

6. பின் அடுப்பை அணைத்து அதை ஆற வைக்கவும்.

7. இதை இப்பொழுது ஒரு பவுலில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

 

1. இதை நீங்கள் உங்களது முடியின் வேர்க்கால்களில் படும் வரை நன்றாக தேய்த்துக் கொள்ளவும்

2. அல்லது உங்களிடம் ஸ்ப்ரே பாட்டில் இருந்தால் அதில் ஊற்றிக் கூட நன்கு ஸ்ப்ரே செய்து பரப்பி விடலாம்.

3. நீங்கள் இதை செய்தது உடன் தலைக்கு குளிக்க கூடாது. நீங்கள் இந்த தண்ணீர் ஆறியவுடன் நீங்கள் ஜடை பின்னுவீர்களோ அது மாதிரி செய்து கொள்ளலாம்.

4. அல்லது இல்லை நான் தினமும் தலைக்கு குளிப்பேன் என்று நினைப்பவர்கள் இரவு முழுவதும் இதை செய்து நன்கு முடியை ஆறவிட்டு, காலையில் தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

5. கண்டிப்பாக உங்களுக்கு முடி உதிர்வு இருக்காது முடி நன்கு கருப்பாக வளரும்.

author avatar
Kowsalya