மாவீரன் படத்தின் வாய்ஸ் ஓவர் 3 பேரில் இவர்தான்!! கான்ஃபிட்டின்ஸில் அவரது ரசிகர்கள்!!

0
44

மாவீரன் படத்தின் வாய்ஸ் ஓவர் 3 பேரில் இவர்தான்!! கான்ஃபிட்டின்ஸில் அவரது ரசிகர்கள்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவாத படம் பிரிண்ஸ்.இந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படத்தின் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொண்டு இருந்தார்.

இந்த வகையில் அவர் இப்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் மாவீரன்.இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்பொழுது திரைக்கு வர தயாராக உள்ளது.

இன்னும் 7 நாட்களில் திரைக்கு வர உள்ள நிலையில் அதிக அளவின் இந்த படத்தை பற்றி பேசுவதற்கு முக்கிய காரணம் என்வென்றால் இதனுடையா தனித்துவமான ட்ரெய்லர் தான் அதற்கு காரணம்.

அந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.

மேலும் அந்த ட்ரெய்லரில் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு ஏதோ ஒரு குரல் கேட்டு கொண்டே இருக்கும். அந்த குரல் யாராக இருக்கும் என்று ரசிகர்களிடையே ஆர்வம் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் படக்குழு கமலஹாசன் மற்றும்  ரஜினிகாந்த் அவர்களிடையே கேட்ட பொழுது கால்சீட்  இல்லாத காரணத்தால் அவர்களால் வாய்ஸ் ஓவர் செய்ய முடியாமல் போய் விட்டதாக தெரிவித்தனர். மேலும் படம் வெளியாகும் பொழுது அதை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி உள்ளது என்று படக்குழு கூறியுள்ளது.

இந்த நிலையில் அந்த குரல் விஜய் சேதுபதி ,சிம்பு ,தனுஷ்  ஆகிய மூவரில் ஒருவருடையது என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது. இதில் தனுஷ் ரசிகர்கள் கட்டாயம் இது தனுஷ் அவர்களின் குரலாக  இருக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

author avatar
Parthipan K