4 மிளகு போதும்! கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய!

0
131
#image_title

இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளால் மக்கள் படாத பாடு படுகின்றனர்.  சுவைக்கு ஏற்ப அதை உண்டு விடுகின்றனர். ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளை அறிய மறுக்கின்றனர்.

 

இப்பொழுது எந்த குழந்தைகளையும் அல்லது 23 to 27 வயதுள்ள பெண்களையோ கேட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் என்கிறார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் கர்ப்பப்பையில் நீர்கட்டி ஏற்படுவதால் ஏற்படுகிறது. பிசிஓடி என்கிறார்கள். இது எப்படி தான் வருகிறது இதை எப்படி தான் குணமாக்குவது என்பதை பற்றித்தான் இந்த பதிவு.

 

சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும். மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. கழற்சி  காய் பருப்பு

2. மிளகு

 

செய்முறை:

 

1. நாட்டு மருந்துகளில் கழற்சிக்காய் என்று கேட்டால் கொடுப்பார்கள் கழற்சிக்காய் என்பது ஒன்றுமில்லை சூடுக்கொட்டை.

2. இந்த சூடு கொட்டை உடைத்தால் உள்ளே பருப்பு இருக்கும்.

3. இந்த பருப்புடன் 4 மிளகு சேர்த்து தினமும் காலையில் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உன் பெண்களுக்கான ஒழுங்கற்ற மாதவிடாய் சரியாகும்.

author avatar
Kowsalya