கைப்பேசி பார்ப்பதனால் வரும் கிட்டப் பார்வை தூரப் பார்வை சரியாக அற்புதமான வீட்டு வைத்தியம்!

0
237

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால் பார்வை குறைபாடுகள் ஏற்படுகின்றன. பார்வை குறைபாடுகளை சரிசெய்வதற்கான இயற்கை வழிமுறையே இங்கு காண்போம். இது நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த அற்புதமான வீட்டு வைத்தியம்.

இதற்கு தேவையான ஒரே பொருள் ஆமணக்கு எண்ணெய்.

நம் அனைவருக்கும் தெரியும் ஆமணக்கு எண்ணெய் நம் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

செல்போன் பயன்படுத்துவதால் நரம்புகள் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தி வரும் பொழுது நரம்புகள் மறுபடியும் புத்துணர்வு பெற்று சரிவர இயங்க ஆரம்பிக்கும்.

இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை காண்போம்.

1. ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆமணக்கு எண்ணையை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அதை உங்களது தொப்புளில் விட்டு தொப்புளில் இருந்து ஒரு அங்குலம் அளவு சுற்றி தடவி விட்டு அனல் பறக்க தேய்த்து விடுங்கள்.

3. இவ்வாறு தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வரும் பொழுது உங்களது கண் குறைபாடுகள் கிட்டப்பார்வை தூரப்பார்வை ஆகியவை கண்டிப்பாக சரியாகிவிடும்.

அதிகமான குளிர்ச்சி உடம்பாக இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்து வாருங்கள்.

நமது உடலின் மையப்பகுதி தொப்புள் தான். இங்கு இருந்து பல்வேறு நரம்புகள் பல்வேறு திசையில் செல்கின்றன. தொப்புளில் விளக்கெண்ணையை வைத்து தடவி வரும்பொழுது கண் வீக்கம், கண் நரம்பு பாதிக்கப்படுதல் ஆகியவை விரைவில் குணமடைந்து கண்பார்வை தெளிவாகும்.

Previous articleநாள்பட்ட வராமல் இருந்த மாதவிடாய்(Irregular Periods) ஒரே நாளில் வந்து விடும்!
Next articleநுரையீரலில் உள்ள நாள்பட்ட சளியை வெளியேற்றி வலிமையை அதிகரிக்க இதை குடித்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here