தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி!

0
374
#image_title

தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி!

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆ.ராசா அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசியுள்ளார். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் “எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசிய ஆ.ராசா அவர்கள் மதுரை பக்கம் வந்தால் நாக்கை அறுத்து விடுவேன்” என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.

மறைந்த நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களை திமுக கட்சிக் கூட்டம் ஒன்றில் “லூசு” என்று திமுக எம்.பி ஆ.ராசா அவர்கள் பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சுக்கு பல்வேறு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எம்பி ஆ.ராசா அவர்களின் இந்த பேச்சு அதிமுக கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மதுரை மாவட்டத்தில் நேற்று(பிப்ரவரி1) திமுக கட்சியை கண்டித்து அதிமுக கட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செல்லூர் ராஜூ அவர்கள் எம்பி ஆ.ராசா அவர்கள் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

எம்பி ஆ.ராசா அவர்கள் பேசியது தொடர்பாக அதிமுக கட்சிக் கூட்டத்தில் செல்லூர் ராஜூ அவர்கள் “திமுக கட்சியின் எம்எல்ஏ கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் மீது எடுத்துவிட்டார்கள். அதற்கு பிறகு எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள் என்று கருதலாம். செய்தி ஊடகங்களில் வந்த பிறகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று அறிவித்தார். அதற்கு பிறகுதான் கைது செய்யப்பட்டனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாருக்கு உள்ளான எம்பி ஆ.ராசா அவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசுகிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்களுடயை தலைவரை பெரியப்பா என்று சொல்கிறார். அப்படி இருக்க ஆ.ராசா அவர்களை ஸ்டாலின் அவர்கள் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை.

பட்டியல் இன மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுக்க வக்கில்லாத நீதான் லூசு. மதுரைப் பக்கம் வந்தால் உன்னுடைய நாக்கை அறுத்துவிடுவேன். இப்படித்தான் ஒருத்தன் தலைவரையும், அண்ணாவையும் தவறாக பேசினான். அதனால் அவனுடனான கூட்டணியை முறித்துவிட்டோம்.

திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரும் திண்டுக்கல் பூட்டு போட்டு போல் இருக்கின்றனர். நாங்கள் எந்த கட்சிக்கும் அடிமையாக இருக்க மாட்டோம்” என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்.