மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்!!

0
34
Important notice for students!! Apply for reinstatement from today!!
Important notice for students!! Apply for reinstatement from today!!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம்!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 93  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த தேர்வில் 11 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் மாதம்  துணை தேர்வு நடைபெற்றது.

அந்த துணை தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் 24 ம் தேதி வெளியிட்டப்பட்ட நிலையில் பதினொன்றாம்  வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 28 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு வெளியிடப்படும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளின் தற்கால மதிப்பெண் சான்றிதழை அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் முடிவுகளில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும் மாணவர்களுக்கு உத்தவிடப்பட்டுள்ளது.

இதனை ஆகஸ்ட் 1 மற்றும்  2 ஆம் தேதிகளில் மறு கூட்டலுக்கு  மாணவர்கள் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K