ஜடேஜா கலந்து கொள்ளமாட்டார்

0
70

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மே மாதம் தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் 13 வது சீசன் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

சென்னை வீரர்கள் பயிற்சி எடுப்பதற்காக சேப்பாகத்திற்கு வர இருகின்றனர். அந்த வகையில் டோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று வந்துள்ளது. அதேபோல அனைத்து சென்னை வீரர்களும் பரிசோதனை செய்யப்பட உள்ளனர்.  சென்னையில் நடக்கும் பயிற்சி முகாமில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந் தேதி அமீரகத்துக்கு புறப்படும் முன்பாக அவர் சென்னை வந்து அணியினருடன் இணைந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K