என் அனுபவத்தில் சொல்கிறேன்.. திரையுலகம் பெண்களுக்கு.. ஓபனாக பேசிய பிரபல நடிகை!!

0
37
#image_title

என் அனுபவத்தில் சொல்கிறேன்.. திரையுலகம் பெண்களுக்கு.. ஓபனாக பேசிய பிரபல நடிகை!!

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மஹிமா நம்பியார்.இந்த வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து குற்றம் 23,அகத்திணை,மகாமுனி,இரவுக்கு ஆயிரம் கண்கள்,புரியாத புதிர்,கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.தமிழ்,மலையாளம் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

தற்பொழுது சந்திரமுகி 2,ரத்தம்,முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையான ‘800’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் அவர் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.அதில்
சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.இப்படத்தில் மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது என்று கூறினார்.

இதனை தொடர்ந்து திரையுலகம் நடிகைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதற்கு மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து இதற்கு நான் கருத்து கூற முடியாது.என் திரைப்பயண வாழ்க்கையை பொறுத்த வரையில் எந்த மோசமான அனுபவமும் எனக்கு நிகழவில்லை.நான் யாராலும் தவறாக நடத்தப்பட்டதில்லை.என் திரை வாழக்கை சிறப்பாக செல்கிறது என்று மஹிமா நம்பியார் கூறினார்.