குருவை விட்டு விலகும் ராகு பகவான் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

0
29
#image_title

குருவை விட்டு விலகும் ராகு பகவான் – ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

தற்போது மேஷ ராசியில் குரு – ராகு பகவான்களின் சேர்க்கை நிகழ்ந்து வரகிறது. வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு – கேது பெயர்ச்சியில் ராகு குருவை விட்டு விலகி மீன ராசிக்கு செல்வார். இதனால் குரு சண்டாள யோகம் மேஷ ராசியில் முடிவடைகிறது. இதன் காரணமாக எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்:

குரு ராகுவின் பிரிவால் மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. உங்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். முதலீடு செய்தவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் நிதிநிலை சீராக இருக்கும்.

சிம்மம்:

குரு ராகுவின் பிரிவால் சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு குருவின் 5ம் பார்வை முழுமையாக விழப்போகிறது. உங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். உங்கள் தந்தையின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். உங்களுடைய தொழில் சிறக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும்.

துலாம்

குரு ராகுவின் பிரிவால் துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு பண ரீதியான பிரச்சினைகள் தீரும். குருவின் நேரடிப் பார்வை உங்கள் மேல் விழுவதால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கும். மனைவியுடன் இணமாக இருப்பீர்கள். உடல்நிலை சீராக இருக்கும். பிரிந்த நண்பர்கள் திரும்பி வருவார்கள்.

தனுசு:

குரு ராகுவின் பிரிவால் தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு குருவின் 9ம் பார்வை உங்கள் மேல் விழுவதால், பல நன்மைகள் உங்களை தேடி வரப்போகிறது. பல வெற்றிகளை சந்திப்போகிறீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். சந்தோஷம் நிலைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள். தொழிலில் நீங்கள் விரும்பிய உயரத்தை அடைவீர்கள்.

author avatar
Gayathri