உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! இந்த ஒரு இலை போதும்!

0
112

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! இந்த ஒரு இலை போதும்!

உடல் எடையை எளிமையாக முறையில் குறைக்க ஒரு மூலிகை இலை போதும் அதனைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். கற்பூரவள்ளி இலை. பெரும்பாலும் அனைவரின் வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு மூலிகை இலையாகும்.இதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

இருமல், சளி, காய்ச்சல் போன்ற பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதாகவும் உள்ளது. நம் உடலில் உள்ள தேவையற்ற நச்சு கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுகிறது. முகப்பருக்கள் வராமல் மற்றும் தடுக்கவும் உதவுகிறது.

தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் பலவிதமான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இதன் விளைவாக நம் உடல் பருமன் அதிகரிக்க செய்கிறது. இதனை எவ்வித செலவுமின்றி பக்க விளைவுகள் இன்றி வீட்டில் வளர்க்கக்கூடிய மூலிகை இலையான கற்பூரவள்ளி இலையின் மூலமாக இதனை எவ்வாறு குறைக்கலாம் என்பதை காணலாம்.

நம் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை வெளியேற்று உதவுகிறது. அதிகப்படியான டாக்சின்களை அளிக்க உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு இஞ்சியில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிகப்படியான மெட்டபாலிசம் நிறைந்துள்ளது. வாயு பிரச்சனை ஏற்படுவதன் காரணமாகவும் உடல் பருமன் அதிகரிக்கச் செய்யும் இதனை சரி செய்ய பெருங்காயத்தூள் நம் சாப்பிடும் உணவுகளுடன் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

கற்பூர வள்ளி நான்கு இலை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு இஞ்சி, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் சீரகப்பொடி, ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து அதனை வடிகட்டி ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பருக வேண்டும்.

இதனை இரண்டு நாள் தொடர்ந்து பருகுவதன் மூலமாக உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது.

author avatar
Parthipan K