விஜயகாந்த் நடிப்பில் உருவான படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய உழவன் மகன்!

0
151
#image_title

விஜயகாந்த் நடிப்பில் உருவான படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய உழவன் மகன்!

மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் நடிப்பில் உருவாகி வெளியான உழவன் மகன் திரைப்படத்தை மறைந்த நடிகரும் முன்னால் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து பாராட்டியுள்ளார். இதை மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா மூலமாக மக்களுக்கு இரண்டு நல் உள்ளங்கள் கிடைத்தது. சினிமா மூலமாக பிரபலமடைந்து பின்னர் அரசியலில் நுழைந்து மக்கள் மனதை வென்ற எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட எம்.ஜி ராமச்சந்திரன் அவர்களும் அவரையே கடவுளாக மனதில் நினைத்து அவரைப் போலவே ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வந்த விஜயகாந்த் அவர்களும் தான்.

எம்.ஜி.ஆர் அவர்களைப் போலவே மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் ஒவ்வொரு காரியத்தையும் செய்து வந்ததால் தான் அவரை மக்கள் அனைவரும் கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைத்தனர். இந்நிலையில் விஜயகாந்த் அவர்களை பற்றி எம்.ஜி.ஆர் அவர்கள் ஒன்று கூறியுள்ளார்.

பொதுவாக எம்.ஜி.ஆர் அவர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லும் பழக்கத்தை கொண்டிருந்தார். அப்போது வெளியே செல்லும் பொழுது சாலையில் வேலை செய்பவர்களுடன் நின்று பேசிக் கொண்டுதான் செல்வார்.

அதே போல ஒருநாள் இரவில் எம்.ஜி.ஆர் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது விஜயகாந்த் அவர்களின் படத்திற்கு போஸ்டர்களை ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள் அருகில் இருந்த நபரிடம் “நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கும் எனக்கு இருக்கும் ரசிகர்களை போலவே ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகர் விஜயகாந்த் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது” என்று கூறியிருந்தார். அதே போல நடிகர் விஜயகாந்த் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி ஒரு விஷயம் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி நடிகர் விஜயகாந்த் அவர்கள் “நான் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகன். அவரை பார்த்து தான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். ஆனால் இதுவரை நான் எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் பார்த்தது இல்லை. ஆனால் அவருக்கு பதிலாக ஜானகி அம்மா அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் ஜானகி அம்மா அவர்கள் ஒன்று கூறினார்.

அது என்னவென்றால் ‘உங்களுடைய நடிப்பில் வெளியான உழவன் மகன் திரைப்படத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் அடிக்கடி பார்த்து ரசிப்பார். அந்த திரைப்படத்தில் மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு வரும் பாடல் காட்சியை கண் இமைக்காமல் பார்த்து மகிழ்வார்’ என்று கூறினார்.

இந்த விஷயத்தை ஜானகி அம்மா அவர்கள் என்னிடம் செல்லும் பொழுது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நான் எம்.ஜி.ஆர் அவர்களை பார்த்து ஒரு பக்தனாகத் தான் வளர்ந்தேன். அப்படிப்பட்ட என்னுடைய கடவுள் நான் நடித்த என்னுடைய படத்தை அடிக்கடி பார்த்து ரசித்துள்ளார் என்ற தகவல் என்னை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது” என்று மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.