நீட் தேர்வுக்கு மீண்டும் புதிய விதிமுறை!! தேசிய மருத்துவ வாரியம் அறிவிப்பு!!

0
110
New rule again for NEET exam!! National Medical Board Notice!!
New rule again for NEET exam!! National Medical Board Notice!!

நீட் தேர்வுக்கு மீண்டும் புதிய விதிமுறை!! தேசிய மருத்துவ வாரியம் அறிவிப்பு!!

2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ வாரியம் புதிய சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில்  இளநிலை மருத்துவ பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட்  நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

இதன் மூலம்தான் தற்போது வரை மருத்துவ மாணவர் சேர்க்கை  நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு பல விதிமுறைகளை தேசிய மருத்துவ  ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனையடுத்து மருத்துவ படித்தவர்களுக்கான நெக்ஸ்ட் தேசிய மருத்துவ தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

மருத்துவ படிப்பதற்கு நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில்  மருத்தவ படித்தவர்களுக்கு தகுதி தேர்வுகளை  இணைந்து நெக்ஸ்ட் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் 1 தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வியில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவ பயற்சி அளிக்கப்படும்.

அதனை தொடர்ந்து நெக்ஸ்ட் 2 தேர்வு இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதுநிலை மருத்துவ படிக்க முடிவும் என்று அறிவித்துள்ளது.  வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்து வருபவர்களுக்கு இந்த தேர்வு கட்டயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கும் தனி விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில்  எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கும், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவருக்கும் இந்த தேர்வியில் தேர்ச்சி பெற்றால் மட்டும் மருத்துவராக முடியும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த தேர்வு விதிமுறை இந்த ஆண்டு நடைமுறை படுத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இதனை ஏற்கனவே சுகாதார அமைச்சம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jeevitha