பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிந்த நிலையில், தேர்வுதாளை திருத்தும் பணி வெகு விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்வு ரிசல்ட் வருகிற மே 5ம் தேதி வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மே 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 5ம் … Read more

தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்

தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்

தடம் புரண்ட சரக்கு இரயில் – மாற்று பாதையில் விரைவு இரயில் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு இரயில்,  இன்று காலை 3மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை இரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளது. இரயில் இன்ஜினிலிருந்து 3வது பெட்டி முதல் 8வது பெட்டி வரை தண்டவாளத்தை விட்டு இறங்கியுள்ளது. சரக்கு இரயில் தடம் புரண்ட காரணத்தால், அந்த வழியே செல்லும் விரைவு இரயில்களும், அதாவது சேலத்திலிருந்து தருமபுரி செல்லவேண்டிய விரைவு இரயிலும், … Read more

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை!

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை!

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை! செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற 28  வயது இளைஞர் சுயதொழில் செய்து வந்தார். இவருக்கும் மறைமலை நகரை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது, இவர்களது நிச்சயதார்த்தம் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திவ்யாவிற்கு இதற்கு முன் வேறொருவருடன் காதல் இருந்துள்ளது, திருமணம் பேச்சு எடுத்தவுடன் திவ்யா, நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். என்று சொல்லியிருகிறார். … Read more

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா?

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா?

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா? இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் நகரம் சென்னை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை காவல்துறை மானியக் கோரிக்கை கூட்டத் தொடர் நடைபெற்றது, அந்த கூட்டத் தொடரில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டார். அப்போது காவல்துறை கொள்கை விளக்கம் குறித்து சில தகவல்கள் வெளியாகின. “காவல்துறை இயக்குனரின் தலைமையின் கீழ் 5 கூடுதல் காவல் ஆணையர்கள் 7 காவல் இணை ஆணையர்கள் 31 காவல் துணை ஆணையர்கள், என … Read more

ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு பக்தர்கள் கொளுத்திய சூடம்!! பூட்ஸ் காலால் அணைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்!!

ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு பக்தர்கள் கொளுத்திய சூடம்!! பூட்ஸ் காலால் அணைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்!!

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் பக்தர்கள் கொளுத்திய சூடத்தை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளிய சம்பவம் பக்தர்கள் மனதை புண்படுத்தியுள்ளது – தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேர் சித்திரை வீதிகளில் வலம் வந்த பொழுது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பழம், பூ வைத்து, தேங்காய் … Read more

மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!!

மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் - வேதனையில் மீனவர்கள்!!

மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!! சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆறு  சேரும் இடமான முகத்துவார பகுதியில், மீன் பிடிக்கும் தொழில் நடக்கிறது. எண்ணூரில் மட்டும் 8 மீனவ குப்பங்கள் இருக்கிறது, அவற்றின் அங்கமாக விளங்கும் கொசஸ்தலை ஆறு நேற்று முதல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. திடீரென தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியதை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பின் … Read more

வந்தே பாரத் ரயில் 2வது சோதனை ஓட்டமும் வெற்றி: மக்களிடையே பெரும் வரவேற்பு!

வந்தே பாரத் ரயில் 2வது சோதனை ஓட்டமும் வெற்றி: மக்களிடையே பெரும் வரவேற்பு!

வந்தே பாரத் ரயில் 2வது சோதனை ஓட்டமும் வெற்றி; திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 7 மணி நேரம் 50 நிமிடங்களில் வந்தடைந்தது, மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் இரண்டாவது சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு சென்றடைய 7 மணி 50 நிமிடங்கள் ஆனது. தம்பனூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்ட ரயில், மதியம் 1.10 மணிக்கு காசர்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. முதன் முதலாக … Read more

முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள்!! அமைச்சரிடம் எம்எல்ஏக்கள் வேண்டுகோள்!!

முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள்!! அமைச்சரிடம் எம்எல்ஏக்கள் வேண்டுகோள்!!

சட்டப்பேரவையில் முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் துரைமுருகனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கியபோது பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த மன்றம் ஒரு உயர்வானது . நாமெல்லாம் இந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம். நம்ம தொகுதியில் உள்ள 2.5 லட்சம் பேரில் நமக்கு தான் அந்த பாக்கியம் கிடைத்தது. இந்த மன்றத்தில் நாம் இருந்தோம் என்பதே நம்முடைய வருங்கால சந்ததியருக்கு ஒரு பெருமை. இந்த மன்றத்தில் நீண்ட காலம் பெரிய பெரிய … Read more

நடிகர் வடிவேல் போல் ஏரி காணவில்லை கண்டு பிடித்து தரக்கோரி கிராம மக்கள்மனு!

நடிகர் வடிவேல் போல் ஏரி காணவில்லை கண்டு பிடித்து தரக்கோரி கிராம மக்கள்மனு!

நடிகர் வடிவேல் போல் படப்பாணியில் ஏரியை காணவில்லை கண்டு பிடித்து தாருங்கள் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த கிராம மக்கள். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிகுளம் கிராமத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்த இரண்டு ஏக்கர் பரப்பளவிலான ஏரியை காணவில்லை. 15 ஆண்டுகளாக காணாமல் போன ஏரி தற்போது தரிசு நிலமாக உள்ளது எனவும் இதனை மீட்டு ஏரியை புணரமைத்தால் பொன்னாற்று பாசன வாய்க்காலின் மூலம் ஏரியில் நீர் நிரப்பலாம் எனவும் … Read more

சேலத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

சேலத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

சேலத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேலத்தில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 265 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பை பயன்படுத்தியதற்காக இரண்டு கடைகளுக்கு ரூ.4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் அஸ்தம்பட்டி இருந்து ஏற்காடு ரோடு செல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர மாம்பழக் கடைகள் உள்ளிட்ட சிறு வியாபார கடைகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான … Read more