நடுரோட்டில் நின்று போலீஸ் செய்த கேவலமான செயல் : வீடியோவை பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

0
90

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரதமர் மோடி அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மேலும் இந்த காலகட்டத்தில் தான் நாம் கவனமாக இருந்து கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.

இந்த உத்தரவின் எதிரொலியாக நாடு முழுவதும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்களுக்கு வரும் மக்களிடம் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஊரின் அங்கு பணியில் மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவல்துறையினர் ஆகிய மூன்று பிரிவினரும் அயராது பாடுபட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையினரை குறை கூறி வந்த பொதுமக்கள் தற்போது பெரிதும் பாராட்டி வருகின்றனர். இதில் ஒருபடி மேலே சென்ற தன்னார்வலர்கள் சிலர் காவல்துறையினருக்கு உணவு நீர் முகமூடி போன்றவைகளை வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் காவலர் ஒருவர் நெல் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி லஞ்சம் வசூலித்துள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் ராணி அண்ணா மகளிர் கல்லூரி முன்பு நடந்துள்ளது.

இந்த வீடியோவை பதிவிட்ட நெட்டிசன்கள் சிலர் சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு தமிழக அரசு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுபோன்ற காவலர்களால் தான் காவல்துறையின் மீது இருக்கும் நல்ல அபிப்ராயமும் கெட்டுப் போகிறது என்று சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

author avatar
Parthipan K