வெங்காயத்தை சாக்ஸில் வைத்து தூங்கினால் உடலில் என்ன நடக்கும்?

0
201
#image_title

வெங்காயத்தை சாக்ஸில் வைத்து தூங்கினால் உடலில் என்ன நடக்கும்?

இரவு தூங்கும் முன்பு சாக்ஸில் வெங்காயத்தை வைத்து காலில் அணிந்து தூங்கினால்… என்ன நடக்கும் என்பது தெரியுமா..? அது குறித்து விரிவாக பார்ப்போம்.

 

உலகில் பருவகால மாற்றங்கள் அடிக்கடி திடீரென்று நிகழ்வது உண்டு. இந்த பருவகால மாற்றங்களினால் நமக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் எளிமையாக வந்து விடுவது வழக்கம். இதை விரைவாக சரி செய்ய நம்மில் பலர் மருந்துக் கடைகளுக்கு செல்வது வழக்கம். சிலர் வீட்டு வைத்தியத்தை விரும்புவர்.

 

அது போல சில நாட்களுக்கு முன்னர் சளி காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிராக போராட ஒரு மருத்துவக் குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டது. அது என்ன என்றால் பச்சை வெங்காயத் துண்டுகளை எடுத்து சாக்ஸில் போட்டு அதை காலில் மாட்டிக் கொண்டு இரவு தூங்கினால் காய்ச்சல் சளி போன்ற நோய்கள் விரைவாக குணமடையும் என்பது தான். உண்மையில் சாக்சில் வெங்காயத்தை வைத்து உறங்கினால் காய்ச்சல் சரியாகுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

சாக்ஸில் வெங்காயத்தை வைத்து உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்:

 

பொதுவாக வெங்காயச்சாறு இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இந்த வெங்காயத்தை காலில் அணியும் சாக்ஸித் போட்டு அதை காலில் அணிந்து இரவு தூங்கினால் காய்ச்சல் ஏற்படமால் இருக்கும்.

 

சாக்ஸில் வெங்காயத்தை வைத்து காலில் அணிந்து இரவு தூங்குவதால் வெங்காயத்தில் உள்ள கந்தகக் கலவை உடலுக்குள் சென்று பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொன்று விடுகின்றது.

 

மேலும் இந்த முறை நம் உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கவும், காய்ச்சலின் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. இந்த கூற்றை உண்மை என்று நிரூபிக்க அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

 

வெங்காயத்தின் இதர

நன்மைகள்:

 

* நம் அன்றாட உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்வது உணவிற்கு மட்டும் சுவையை ஏற்படுத்தாமல் நம் உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை சேர்த்து கொடுக்கின்றது.

 

* சிவப்பு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் நோய் உள்ள பெண்களின் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

 

* போலிக் அமிலம், பயோடின், வைட்டமின் பி6, வைட்டமின் சி, தாமிரம் போன்ற கலவைகள் நிறைந்த இந்த வெங்காயத்தில் நம் உடலுக்கு தேவையான.புதிய செல்களை உருவாக்கக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

 

* வெங்காயத்தை நாம் தினந்தோறும் சேர்த்துக்கொள்வதால் புற்றுநோயை உண்டாக்கும் தனிமங்களின் செயல்பாட்டை தடுக்கும் ஆற்றலை வெங்காயம் நமக்கு தருகிறது.

 

* வெங்காயத்தில் குவெர்செடின் எனப்படும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றி உள்ளது. இது நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கின்றது.

 

* வெங்காயத்தில் காணப்படும் கந்தகக் கலவைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. மேலும் உயர் ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.

 

* வெங்காயம் நமக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றது.

 

* வெங்காயத்தில் இருக்கும் கந்தகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவி செய்கிறது.

 

பால்பிலான்களின் சிறந்த மூலமாக வெங்காயம் விளங்குகிறது. அவை ஆன்டி ஆக்சிடன்ட்களாக செயல்படுகின்றது.

 

* வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலங்களை இவை ஆதரிக்கின்றது.

 

* வெங்காயத்தில் அதிகம் நார்ச் சத்துகள் உள்ளதால் நல்ல செரிமானத்தை இது ஊக்குவிக்கின்றது.

 

* வெங்காயத்தில் உள்ள பிரக்டோ ஒலிகோசாக்கரைடுகள் வந்து ப்ரி பயாடிக்குகளாக செயல்படுவதால் அவை பெரிய குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கின்றது. மேலும் இவை செரிமானத்திற்கு உதவுவதோடு பெருங்குடல் புற்றுநோயிக்கான அபாயத்தையும் குறைக்கின்றது.